ஈரோடு, ஜூலை 6- ரயில்வே தனியார் மயத்தைக் கண்டித்து ஈரோடு ரயில் நிலையத்தில் டிஆர்இயு சார்பில் வெள்ளியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. பொதுத்துறை நிறுவனமான ரயில்வே நிறுவனத்தை தனியா ருக்குத் தாரை வார்க்கும் முயற்சி யைக் கைவிட வேண்டும். ரயில் கட்டணங்கள் உயர வழிவகுக்கப் படுவது தடுக்கப்பட வேண்டும். ஆட்குறைப்பு செய்யும் விதிகளை ரத்து செய்ய வேண்டும். மோடி அரசு ரயில்வே தொழிலாளர்கள் மீது சர்ஜிகல் ஸ்டிரைக் செய்து வருகி றது. இது நிறுத்தப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு ரயில் நிலையத் தில் தட்சிண ரயில்வே எம்பிளாய்ஸ் யூனியன் சார்பில் வெள்ளியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங் கத்தின் சேலம் கோட்ட பொருளா ளர் எம்.முருகேசன் தலைமை வகித் தார். ஓடும் தொழிலாளார்கள் சங்கத் தின் செயலாளர் பி.எஸ்.கி.பிரகாஷ், கோட்ட உதவித்தலைவர் கே.சுப்பிர மணியம், மத்திய சங்கத்தின் உதவி பொது செயலாளர் சி.முருகேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் கோட்ட உதவி செயலாளர் அன்பரசு உட்பட பலர் பங்கேற்றனர்.