tamilnadu

img

கே.வி.பள்ளியின் நன்மதிப்பை பாதுகாக்க வேண்டும்

பி.ஆர்.நடராஜன் எம்.பி., வேண்டுகோள்

கோவை, டிச. 17 –  சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி யின் நன்மதிப்பை பாதுகாக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வேண்டுகோள் விடுத் தார். கோவை மாவட்டம் சூலூர் விமான படை தளத்தின் அருகில் உள்ள கேந்தி ரிய வித்யாலயா பள்ளியில் கடந்த வியா ழன்று அப்பள்ளியில்  படிக்கும் 11ஆம் வகுப்பை  சேர்ந்த மாணவரை ஆசிரியர் கள் கண்டித்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ஆசிரியர்கள் பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாக கூறி கோவை அரசு மருத்துவமனையில் மாணவர் அனுமதிக்கப்பட்டார். இந்த புகாரின் அடிப்படையில் கேந்திரிய பள்ளி  முதல்வர்  மேகநாதன், ஆசிரியை கள் திவ்யா, தமிழரசி, அருணா ஆகியோர் மீது போக்சோ  சட்டம் மற்றும்  கொலை மிரட்டல்  ஆகிய பிரிவுகளின் கீழ் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  இதனிடையே பள்ளியில் ஒழுங்கீனமாக செயல்பட்டதற்காக  11 ம் வகுப்பு மாணவர் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், அவரும் அவரது தம்பியும் வகுப்பு மாணவ ருடன் சேர்ந்து முதல்வரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், மாணவர் களை தூண்டி விட்டதாகவும் அவர்க ளின் பெற்றோர்கள் ஹரேராம் சிங் சீமா குமாரி மீது பள்ளியின் பொறுப்பு முதல்வர் நாகேந்திரன் புகார் அளித் தார். இதன் பேரில் சூலூர் விமான படை தளத்தில் பணியாற்றி வரும் ஹரேராம் சிங் உள்ளிட்ட 4 பேர் மீது 3 பிரிவுக ளில் சூலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் சூலூர் கேவி பள்ளியின் நன்மதிப்பை சீர்குலைக்க அனுமதிக்க கூடாது. பள்ளி நிர்வாகம், பெற்றோர்கள் அனைவரும் ஒன்றி னைந்து பள்ளியின் நற்பெயரை பாது காக்க வேண்டும் என  கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் வேண்டுகோள் விடுத்தார். முன்ன தாக  கேந்திரிய வித்யலயா பள்ளி மாண வர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பி.ஆர்.நடராஜன் எம்பி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ் வாயன்று முறையீடு செய்தனர். இதுகுறித்து பி.ஆர்.நடராஜன் எம்பி., செய்தியாளர்களிடம் கூறு கையில்,  சூலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தாமல் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  பள்ளி தொடர்ந்து இயங்கவும், முதல்வர்  மற்றும் ஆசிரியர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். ஆரம்பத்தி லேயே இதன் மீது கவனம் செலுத்தி ருந்தால் இந்த அளவிற்கு பிரச்சனை வலுத்திருக்காது. இனிமேலாவது பள்ளி நிர்வாகத்தின் தலைவர் தலையிட வேண்டும். இப்பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உண்மை நிலையை வெளிப்படுத்தி பள்ளி எவ்வித தடங்கலுமின்றி செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.