பொள்ளாச்சி, செப். 22- பொள்ளாச்சி ரயில்வே பாலம் அருகே காணப்படும் குண் டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் விபத் திற்குள்ளாகி வருகின்றனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி, திருவள்ளுவர் திடலை அடுத்த மீன்கரை சாலை அருகே உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் அமைந்துள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதில், மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி குளம்போல் காட்சியளிப்பதால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் அடிக்கடி விபத்திற்குள்ளாகின் றனர். மேலும், அவ்வழித்தடம் பொள்ளாச்சி - கேரளா செல்லும் முக்கிய வழித்தடம் என்பதால், கனரக வாகனங்க ளும், பேருந்துகளும், இருசக்கர வாகனங்களும் நாள் தோறும் அதிகளவில் செல்கின்றன. எனவே, வாகன ஓட்டி களின் நலன் கருதி உடனடியாக மாநில நெடுஞ்சாலைத் துறை சாலையை செப்பனிட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.