நாமக்கல், அக்.15- நாமக்கல் மாவட்டம், குமார பாளையத்தில் தீபாவளி போனஸ் 20 சதவிகிதம் வழங்க வலியுறுத்தி சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் ஜீ.மோகன் தலைமை வகித்தார். இதில் விசைத்தறி தொழிலில் பணிபுரியும் அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கு 2018-19 ஆம் ஆண்டு தீபாவளி போனஸ் 20 சதவிகிதம் வழங்க வேண்டும். குமாரபாளையம் பகுதிகளில் மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் கந்துவட்டி வசூலில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். மாவட்ட செயலாளர் எம்.அசோகன், நகர செயலாளர் கே. பாலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.