நாமக்கல், ஆக.22- பொதுத்துறை நிறுவனங்களை தனி யாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசை கண்டித்து நாமக்கல்லில் அஞ்சல்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுத்துறை நிறுவனங்கள் தனி யாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவிற்கு அனைத்து அஞ்சல் ஊழியர்கள் சங்கங்களின் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் அறிவித் திருந்தது. இதன் ஒருபகுதியாக திருச் செங்கோடு அஞ்சல் அலுவலகம் முன்பு அஞ்சல்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட் டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஜீடிஎஸ் ஊழியர் களுக்கு கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்க்கு தாரை வார்க்கும், தொழி லாளர்கள் விரோத போக்கைக் மத்திய அரசு கைவிட வேண்டுமென உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டது. முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பி3வது கிளைத் தலைவர் ஆர்.மாதேஸ் வரன் தலைமை தாங்கினார். பி 4வது கிளைத் தலைவர் வி.வீரமணி, ஜீடிஎஸ் கிளைத் தலைவர் கே.பொன்னுசாமி உள் ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முன் னால் செயலாளர் கே.சுப்பிரமணியன், பி.3.செயலாளர் எம்.ஜெகதீஸ்வரன், ஜீடிஎஸ் அகில இந்திய துணை பொதுச் செயலாளர் கே.சி.ராமச்சந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் திருச்செங்கோடு, சங்க கிரி, வேலூர் பகுதிகளை சேர்ந்த பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.