திருப்பூர், மே 31-சிஐடியு 50ஆம் ஆண்டு அமைப்பு தினத்தை முன்னிட்டு வியாழனன்று திருப்பூரில் சிறப்புப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.திருப்பூர் சிஐடியு மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இப்பேரவைக்கு சிஐடியு மாவட்ட தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ், உழைக்கும் பெண்கள் அமைப்பின் கன்வீனர் எம்.பாக்கியம் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.இப்பேரவையில் சிஐடியு தமிழ் மாநில துணை செயலாளர் மாலதி சிட்டிபாபு பங்கேற்று சிஐடியு தொழிற்சங்கம் உருவான வரலாறு, அதன் வீரஞ்செறிந்த போராட்டங்கள் மற்றும் சங்கம் வளர்ந்த விபரங்களையும், இன்றைய சூழலில் செய்ய வேண்டிய களப்பணிகளை பற்றியும் எடுத்துரைத்தார்.