tamilnadu

img

13 வயது சிறுவன் மீது காவல்துறை தாக்குதல் - மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

கோவை, ஆக. 26 – கோவையில் 13 வயது சிறுவனை காவலர் ஒருவர் தாக்கிய சம்பவம் குறித்து மாநகரக் காவல் ஆணையருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவை சிங்காநல்லூர் காவல் நிலையக் காவலர் துர்காராஜ் என்பவர் முழு ஊரடங்கின் போது வெளியே வந்த 13 வயது சிறுவனை லத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இச்சம்பவம் கார ணமாக அச்சிறுவனின் காலில் ரத்தக்கட்டு ஏற்பட்டது. இதுதொடர்பாக சிறுவனது தரப்பில் புகார் எதுவும் கொடுக் கப்படாததால் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

இருப்பினும், சிறுவன் தாக்கப்பட்டு காயம் அடைந்தது தொடர்பாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக் காட்சிகள் வெளியானதையடுத்து, மாநகரக் காவல் ஆணையர் உத்தரவின் பேரில் காவலர் துர்காராஜ் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.  இந்நிலையில், நாளிதழ்களில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு, மாநில மனித உரிமை ஆணையம் இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இது தொடர்பாக, கோவை மாநகரக் காவல் துறை ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், சிறுவன் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவ டிக்கைகள் குறித்து மூன்று வார காலத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, கோவை ரத்தினபுரி பகுதியில் இரவு நேர டிபன் கடையில் இருந்த சிறுவனை காவல்துறையினர் தாக்கிய சம்பவத்தில் மாநில மனித உரிமைகள் ஆணை யர் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், தற்போது இரண்டாவது சம்பவமாக கோவை மாநகரக் காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத் தக்கது.

;