tamilnadu

img

குழாய் அமைத்து பொதுக்கிணற்றில் மழை நீர் சேமிப்புகோயம்புத்தூர்

அவிநாசி, ஆக. 5 - அவிநாசி அருகே வீடுகளில் குழாய் அமைத்து பொதுக் கிணற்றில் மழைநீர் சேகரிப்பு பணியில் களஞ்சியம் விவசாய சங்கத்தினர் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஒன்றியத்திற்குட்பட்ட எம்மாம் பூண்டி கிராமத்தில் சுமார் 400 வீடுகள் உள்ளன. இப்பகுதியில் களஞ்சியம் விவசாய சங்கத்தினர் முயற்சியில் 170 வீடுகளில் மழைநீரை சேகரிக்க 10’ -12’ நீள, 10 அடி உடைய குழாய் பதித்து அதிலிருந்து வரும் மழை நீரை திருப்பிவிட்டு வடிகட்டி  அருகிலுள்ள 90 அடி பொதுக் கிணற் றில் மழை நீரை விழச்செய்தனர். இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும் கிராமப் பகுதிகளில் தண்ணீர் பற்றாக் குறைக்குத்  தீர்வு காணப்படும் என களஞ்சியம் விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர். இந்நிகழ்வின் அவ்வமைப்பின்  ஒருங்கிணைப்பாளர்கள் அத்திக்கடவு சுப்பிரமணியம், பழனிச்சாமி, ஆனந்த், முத்துக்குமார், ஈஸ்வரன் காசியப்பன் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.