திருப்பூர், நவ. 22- திருப்பூர் மாநகராட்சி 3ஆவது வார்டு விஜயபுரி கார்டனில் அடிப்படை வசதி களை நிறைவேற்றக் கோரி இந்திய ஜன நாயக வாலிபர் சங்க கிளை சார்பாக வெள்ளி யன்று திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டல அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளான சுகாதாரம், சாலை, சாக்கடை வசதிகளை நிறைவேற்றக்கோரி 15 வேலம்பாளையம் முதலாம்மண்டல அலுவலகத்தில் மண்டல துணை ஆணை யாளர் வாசுக்குமாரிடம் மனு அளிக்கப்பட் டது. இதில் குப்பைகளை வீடுகளில் வந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பைகள் தேங்கிக்கிடக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும். விஜயபுரி கார்டன் முதல் அன்னையம் பாளையம் செல்லக்கூடிய மோசமான சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண் டும். 4ஆவது கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குழாய்கள் பதிக்காமல் விடுபட்ட பகுதிக ளில் அடுத்தகட்டமாக குழாய் பதிப்பித்து தருவது போன்ற கோரிக்கைகளை நிறை வேற்றித்தருமாறு வலியுறுத்தினர். இதனைக் கேட்டறிந்த ஆணையாளர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதியளித்தார். இம்மனுவை வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் சதீஸ்குமார், செயலாளர் எஸ். அருள், துணைச்செயலாளர் கதிர், கிளை செயலாளர் விக்னேஷ்,மனோகர், இம்ரான், ராஜ்குமார், கார்த்திக், சினோஜ்அகமது ஆகியோர் அளித்தனர். மேலும், வாக்குறுதிகள் நிறைவேற காலதாமதமானால் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என வாலிபர் சங்கத்தினர் தெரிவித்தனர்.