கோவை, நவ.23- அதிகார மையத்தை நோக்கி குரல் எழுப்ப திராணியற்றவர் களும், வரலாறு தெரியாதவர்க ளும் மட்டுமே வெற்றிடம் குறித்து பேசுகிறார்கள் என கோவை பொதுக்கூட்டத்தில் கே.பால பாரதி குற்றம்சாட்டினார். இந்திய கம்யூனிச இயக்கத் தின் நூற்றாண்டு விழா மார்க் சிஸ்ட் கட்சியினரால் நாடு முழுவ தும் எழுச்சியோடு கொண்டா டப்பட்டு வருகிறது. இதன்ஒருபகு தியாக கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியின் பீளமேடு நகரக்குழு, ஆவரம்பாளையம் கிளைகள் இணைந்து நூற்றாண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் வெள்ளி யன்று நடத்தியது. கோவை ஆவரம்பாளையம் ரெட்ரோஸ் மைதானத்தில் நடைபெற்ற விழாவிற்கு பீளமேடு நகரக்குழு உறுப்பினர் கே.அய்யாசாமி தலைமை தாங்கினார். பி.முத் துக்குமார் வரவேற்றார். இந்நிகழ்ச் சியில் பங்கேற்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் கே.பாலபராதி, சி.பத்ம நாபன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். முன்னதாக கே.பாலபாரதி பேசுகையில், இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட்டுகள்தான் முதல் சதி வழக்கை எதிர்கொண் டவர்கள். மீரட், கான்பூர், பெசா வர் போன்ற சதி வழக்குளை சந்தித்து சிறை சென்றவர்கள், சித்தரவதைகளை அனுபவித்த வர்கள் கம்யூனிஸ்ட்டுகள். இந்த வரலாற்றை ஒருபோதும் மறைக்க முடியாது. ஆனால் கம்யூனிஸ்ட் டுகளின் தியாகங்கள் வரலாற்று பாடபுத்தகங்களில் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது. ஆனால், தியாகத்தால் உருவான செங் கொடி இயக்கத்தின் வரலாற்றை யோ, வளர்ச்சியையோ யாராலும் ஒருபோதும் அழித்து விட முடி யாது. இத்தகைய எந்த வரலாறும் இல்லாத பாஜகதான் அடுத் தவரின் வரலாற்றை திருடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, திருவள்ளுவரை, அம்பேத்கரை, படேலை, சுபாஷ் சந்திரபோசை திருடிக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில், பாஜக தலைவர்களின் வரலாறு முழுமையும் மன்னிப்பு எழுதிக்கொடுத்தது மட்டுமே. இன்று அரசியல் வெற்றிடம் குறித்து சிலர் பேசுகிறார்கள். சமீபத்தில் நடந்து முடிந்த நாடா ளுமன்ற தேர்தலில் திமுக தலை மையிலான அணி 1977க்கு பிறகு மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இப்போது எடப்பாடியின் நாற் காலியில்தான் வெற்றிடம் உள் ளது. இது குறித்து இவர்கள் பேச மறுக்கிறார்கள். அதிகார மையத்தை நோக்கி கேள்வி எழுப்ப திராணியற்றவர்கள் வெற்றிடம் குறித்து பேசுகிறார் கள். திரைப்படத்தில் வீர வசனம் பேசுவதை போல் பேசி திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். இது இனி தமிழக மக்களிடம் எடு படாது. அனு தினமும் மக்கள் நல னுக்காக போராடும் கம்யூனிஸ்ட் டுகளின் தீரமிக்க செயல்பாடு முன்னைக்காட்டிலும் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறிச்செல்லும், பாசிச அபாயத்தை உணர்ந்து மக்களை திரட்டி, அதனை விரட்டியடிக்கும் சீரிய பணியில் தொடர்ந்து பயணிப்போம். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, இப்பொதுக்கூட் டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் கே.மனோகரன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சிங்கை நகரக் குழு செயலாளர் வி.தெய்வேந்தி ரன், பீளமேடு நகரக்குழு செயலா ளர் கே.பாண்டியன் மற்றும் மேக நாதன், ஏ.அருள்பிரகாஷ், எம்.ஜோதிபாசு உள்ளிட்டோர் உரை யாற்றினர். மேலும், கம்யூனிச இயக்க நூற்றாண்டு விழாவினை வரவேற்கும் விதமாக பொதுமக் களுக்கு இனிப்புகள் வழங்கப் பட்டது. இந்த பொதுக்கூட்டத்தில் திரளானோர் கலந்து கொண்ட னர்.