tamilnadu

ஊரடங்கு காலத்திற்கு ஊதியம் : சிஐடியு தொடுத்த வழக்கில் வெற்றி

கோவை, அக்.1–  கோவை காந்திபுரம் சித்தாப் புதூர் சாலையில் ஸ்ரீ ஆர்.வி ஹோட்டல் இயங்கி வருகிறது. இங்கு  ஏராளமான தொழிலாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் சிஐடியு ஹோட்டல் சங்கத்தில் உறுப்பினராக உள்ளனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்கள் வேலை, வருவாய் இன்றி உள்ள நிலையில் இவர்களுக் கான ஊதியத்தை வழங்க வேண்டும் என நிர்வாகத்திடம் சிஐடியு முறை யிட்டது. ஆனால் இதற்கு நிர்வாகம் மறுத்துள்ளது.  இதனையடுத்து, கோவை தொழி லாளர் உதவி ஆணையர் அலுவலகத் தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் முன்னிலை யில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சிஐடியு ஹோட்டல் சங்கத்தின்  செயலாளர் ஏ.எல்.ராஜா, துணைத் தலைவர் ஆறுமுகம், கிளை தலைவர் பாரதிராஜா உள்ளிட்ட நிர்வாகி களும், நிர்வாகத் தரப்பில்  மேலாளர் கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில்  ஊரடங்கு காலத்திற்கு ரூ.15 ஆயிரம் ஊதியம் தருவதாக ஹோட் டல் நிர்வாகம் ஒப்புகொண்டது. இதனை தொழிற்சங்கமும் ஏற்றது. இதனையடுத்து தொழிலாளர்கள் அனைவருக்கும் உடனடியாக ஊதியத்தை நிர்வாகம் வழங்கியது. இது ஹோட்டல் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.