tamilnadu

img

மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்களை தண்டித்திடுக மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் கண்ணீர் மல்க மனு

கோவை, ஜூலை 22- குத்துச் சண்டை வீராங்கனையை தற்கொலைக்குத் தூண்டிய கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளித்தனர்.  கோவை, தொண்டாமுத்தூர் சாலை பூசாரிப்பாளையத்தைச் சேர்ந்த புவனேஷ்வரன் என்பவரின் மகள் யுரேகா (19). குத்துச்சண்டை வீராங் கனையான இவர், கடந்த 1ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் யுரேகாவின் புகைப்படம் மற்றும் அவர் பெற்ற பதக்கங்களுடன் மனு அளிக்க வந்த மாணவியின் தாயார் செய்தியாளர்க ளிடம் கூறுகையில், “பாக்சிங்கில் தேசிய அளவில் வெற்றிபெற்று வந்த யுரேகாவை, தொடர்ந்து பாக்சிங் விளையாடக் கூடாது எனவும்,படிப் பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கல்லூரி நிர்வாகத்தினர் வலி யுறுத்தி வந்தனர். இதனால், மன முடைந்த என் மகள் தற்கொலை செய்து கொண்டார். எனது மகளின் இறப்பிற்கு காரணமான கல்லூரி நிர் வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும்,” கண்ணீர் மல்க தெரிவித்தார்.