tamilnadu

img

விபத்துகளை தடுக்க மரங்களுக்கு வண்ணம் பூச்சு

அவிநாசி, ஜன. 24- அவிநாசி பகுதியில் விபத்துகளை தடுக்க மரங்க ளுக்கு வண்ணம் அடிக்கும் பணிகள் தொடங்கி யுள்ளது. தமிழகத்தில் 31 வது சாலை பாதுகாப்பு வார விழா ஜன.21 ஆம் தேதி முதல் 27 வரை கொண்டாடப் பட்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக அவிநாசியில் நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோரங்களில் இருக்கும் மரங்களுக்கும், சாலையில் உள்ள தடுப்பு சுவர்களுக்கும் வண்ணம் அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்த துறையினர் கூறுகையில், சமீபத்தில் நடந்த உள் ளாட்சித் தேர்தலில் சாலையிலுள்ள தடுப்புச் சுவர்களில் மற்றும் மரங்களில் கட்சிகளின் சின்னம், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதனால் இரவில் வரும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து நேரிட வாய்ப்பு உள்ளது. வருங்காலங்களில் தனியார் விளம்பரதாரர்கள், அரசியல் கட்சியினர் தடுப்புச் சுவர்களில் சுவரொட்டி ஒட்டுவது நிறுத்தம் செய்ய வேண்டும்.  இந்நிலையில், விபத்துக்களைத் தடுக்க சுவ ரொட்டிகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு, வண்ணம் அடிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.

;