tamilnadu

கோவையில் ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா

கோவை, ஜூன் 17- கோவையில் புதனன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதில்  கொரோனா தொற்றால் இறந்த சின்னியம்பா ளையம் பகுதியைச் சார்ந்த இளைஞரின் தொடர் பில் இருந்த 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 9 பெண்கள் 2 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும், பீளமேடு 2, சூலூர்  4, செல்வபுரம் 2, போத்தனூர், துடியலூர், இடை யர்பாளையம், பொள்ளாச்சி, ரேஸ்கோர்ஸ், என்ஜிஜிஓ காலணி, சோமையம்பாளையம், சங்க னூர், சிறுமுகை, வடவள்ளி, பிஎன்பாளையம், ஒண்டி புதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் தலா  ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மொத்த ஆண்கள் 12, பெண்கள் 17 மற்றும்  ஒரு சிறுமி,  ஒரு சிறுவன் ஆகியோர் பாதிக்கப்பட் டுள்ளனர்.

;