tamilnadu

திருப்பூரில் காலாவதியான ஐஸ் விற்பனை?

இருவர் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

திருப்பூர், அக். 28-  திருப்பூரில் காலாவதியான ஐஸ் விற்பனை செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் தள்ளுவண்டியில் ஐஸ் விற்பனை செய்தவர்களை பொது மக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். திருப்பூர் காங்கேயம் சாலை அதியமான் இரண்டாவது வீதியில் ஜெகதீஷ் என்பவருக்குச் சொந்தமான ஜஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஐஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் ராமச்சந்திரன், மயில்சாமி ஆகிய இருவரும் திங்களன்று டூம் லைட் பகுதியில் தள்ளு வண்டியில் ஐஸ் விற்பனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் அவர்களிடம் ஐஸ் வாங்கிச்  சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே  அச்சிறுவர்களுக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தேகம் அடைந்த சிறுவர்களின் உறவினர்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஐஸ் வண்டியை சுற்றி வளைத்தனர். இதையடுத்து தள்ளுவண்டியில் வைக்கப்பட்டிருந்த ஐஸ் பெட்டிக்குள் இருந்த பெரும்பாலான ஐஸ்களில் துர் நாற்றம் வீசியதுடன், காலாவதியானவையாகவும் தெரிந் தன. இதனையடுத்து விற்பனையில் ஈடுபட்ட ராமச்சந்தி ரன், மயில்சாமி ஆகிய இருவரையும், அவர்களிடம் இருந்த இரு தள்ளு வண்டிகளையும் திருப்பூர் தெற்கு காவல் நிலை யத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து சம்பவம் குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஐஸ்களை பரிசோதனைக்கான ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்த னர். காலாவதியான ஐஸ்கள் என ஆய்வு முடிவில் தெரிய வந்தால், ஐஸ் நிறுவன உரிமையாளர் மற்றும் விற்பனை யாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.