tamilnadu

பெண் ஊழியர்களுக்கு இரவு நேரங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்த எதிர்ப்பு

தருமபுரி, ஆக. 25-  பெண் ஊழியர்களுக்கு இரவு நேரங்களில் ஆய்வுக் கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் போராட்ட அறிவிப்பு வெளி யிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவ லர்கள் சங்கத்தின் தருமபரி மாவட்டத் தலைவர் ருத்ரையன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தரும புரி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளரால், அரசு விதிமுறைகளுக்கு முரணாக பொறியியல் பிரிவு  பெண் ஊழியர்களுக்கு இரவு நேரங்களில் தொலைபேசியில்  தொடர்பு கொண்டு பணி முன்னேற்றம் என்ற பெயரில்  உரையாடுவதையும், இரவு நேரங்களில் ஆய்வு கூட்டமும்  நடத்தி வருகிறார். இத்தகைய  பெண் ஊழியர்கள் மீதான  உரிமை மீறலை கண்டித்து செப்டம்பர் 4ஆம் தேதியன்று  அனைத்து நிலை ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் களையும் திரட்டி  தருமபுரி ஆட்சியர் வளாகத்தில் ஆர்ப் பாட்டம் நடத்தப்படும் என  அந்த அறிக்கையில் தெரிவித் துள்ளார். 

;