அன்னூர், ஜூலை 8- அன்னூரை அடுத்த அல்லிகாரபாளையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் இரவு நேர இலவச பாடசாலை ஞாயிறன்று தொடங்கப்பட்டது. கோவை மாவட்டம், ஒட்டர்பாளையம் ஊராட்சிக் குட்பட்ட அள்ளிக்காரம் பாளையத்தில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் இரவு நேர இலவச பாட சாலை தொடக்க விழா நடைபெற்றது. மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சங்கத்தின் கொடி யினை ஒன்றிய பொருளாளர் ரமேஷ் ஏற்றிவைத்தார். பெயர்ப் பலகை மற்றும் பாட சாலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்னூர் ஒன்றிய செயலாளர் முகமது முசீர் திறந்து வைத்தார். கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்க பொறுப்பாளர் சத்தியராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கபீர், சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி ஜீவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.