கோவை, நவ.1- உழைப்பாளி மக்களுக்காக குரல் கொடுப்பவர்களை நக்சல் என முத்திரை குத்துவதும், அறி வாளிகளின் குரலை ஒடுக்க சிறை யில் அடைப்பதும் பாஜகவின் திட்டமிட்ட வேலைகளில் ஒன் றாக இருக்கிறது என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் குற்றம்சாட்டியுள்ளார். பாஜக அரசு மத்தியில் அதி காரத்திற்கு வந்த பிறகு தொடர்ந்து அறிவு ஜீவிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் போன்றவர்களை திட்டமிட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகின்ற னர். இதன் தொடர்ச்சியாக தமிழ கத்தை பூர்விகமாகக் கொண்டவர் அருள்பணி ஸ்டேன்ஸ் சுவாமி. இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தார். தனது 83 வயதிலும் ஆதி வாசி மக்களின் நிலத்தை சூறையா டும் கார்ப்ரேட்டுகளுக்கு எதிராக நீதிமன்றம் உள்ளிட்ட உரிமை போராட்டங்களை நடத்தி வந்தார். இந்நிலையில், ஸ்டேன்ஸ் சுவா மியை கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய பாஜக அரசின் புல னாய்வு பிரிவு கைது செய்து சிறை யில் அடைத்தது.
இதனைக்கண் டித்து இடதுசாரி கட்சிகள், பல் வேறு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு இயக்கங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதி யாக ஸ்டேன் ஸ்சுவாமியை விடு தலை செய்யக்கோரி கோவை யில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் கையெ ழுத்து இயக்க அறப்போட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. கோவை காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலய வளாகத்தில் நடைபெற்ற இந்த இயக்கத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்து உரையாற்றி னார். இப்போராட்டத்திற்கு கிறிஸ்து அரசர் ஆலய அருட் தந்தை முன்னிலை வகித்தார். முன்னதாக பி.ஆர்.நடராஜன் எம்.பி., பேசுகையில், மத்தியில் அதிகாரத்தில் உள்ள பாஜக அரசு திட்டமிட்டே அறிவாளிகளையும், மனித உரிமை செயற்பாட்டாளர் களையும் கைது செய்து வருகி றது. இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர். இதில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பேரன் ஆனந்த் டெல்டும், கவிஞர் வரக ராவ் உள்ளிட்டோரும் அடங்கு வர். தற்போது ஸ்டேன்ஸ் சுவாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆதிவாசி மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் முன்னின்றவர், சட்ட நடவடிக்கையின் மூலம் இம் மக்களுக்கு நியாயத்தை பெற்றுத் தருவதாற்கான போராட்டத்தை முன்னெடுத்தவர் ஸ்டேன்ஸ் சுவாமி. வயது மூப்பு என்றும் பாரா மல் இவரை மத்திய பாஜக அரசு கைது செய்துள்ளது. உழைப்பாளி மக்களுக்காக குரல் கொடுப்பவர் களை நக்சல் என முத்திரை குத்து வதும், அறிவாளிகளின் குரலை ஒடுக்க சிறையில் அடைப்பதும் பாஜகவின் திட்டமிட்ட வேலை களில் ஒன்றாக இருக்கிறது. மறு புறம் ஒரிசா மாநிலத்தில் மக்கள் பணியாற்றிய கிறிஸ்துவ பாதிரி யார் குடும்பத்தை உயிரோடு தீ வைத்து எரித்த குற்றவாளி பட்டி யலில் உள்ளவருக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்படுகிறது.
தேசத்தந்தை மகாத்மா காந்தி குறித்து இழிவாக பேசியவருக்கு கல்வித்துறையில் மிகப்பெரிய பதவியை பாஜக அளித்துள்ளது. நாடு தற்போது சந்தித்து வரும் நெருக்கடியை உழைப்பாளி மக் கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த பாசிச அபாயத்தை எதிர்த் துப் போராட்டத்தை முன்னெ டுப்பது என்பது நமது பிறப்புரிமை என்கிற உத்வேகத்தோடு இந்த போராட்டத்தை நடத்துவோம் என்றார். இந்நிகழ்வில் கிறிஸ்துவ நல் லெண்ண இயக்கத்தின் நிர்வாகி கள் ஆல்வின், ஜோசப், சௌந்திர ராஜன், ஜார்ஜ், தாஸ் மற்றும் மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் என்.ஜெயபால், மாவட்டக்குழு உறுப்பினர் யு.கே. சிவஞானம் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.