tamilnadu

img

அரசு தோட்டக்கலைப் பண்ணையில் காய்த்து தொங்கும் பலாப் பழங்கள்

கோவை,மே 26-கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லார் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் காய்த்து தொங்கும் பலாப்பழங் களை கண்டு ரசிப்பதோடு, வாங்கிச் சென்று உண்டும் மகிழ்கின்றனர் சுற்றுலாப் பயணிகள்.ஆங்கிலேயர்களால் 1900ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தப் பண்ணையில் மா,பலா, எலுமிச்சை, கொய்யா போன்றஉள்ளூர் வகை பழங்கள் முதல் மங்குஸ்தான், துரியன், லிச்சி, லாங்சாட், ரம்பூட்டான் உள்ளிட்ட வெளிநாட்டுவகை பழங்களும் உள்ளன. சீசன் காலங்களில் இங்கு விளையும் பழவகைகள் நேரடியாக விற்பனையும் செய்யபட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது அங்கு விளைந்திருக்கும் தனிச்சுவை மிக்க பலாப் பழங்கள், விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.வேலிப் பலா, சிங்கப்பூர் பலா, பர்லியாறு பலா, கல்லாறு பலா ஆகிய நான்கு வகையான பலாப்பழங்கங்கள் மரங்களில் காய்த்து தொங்குகின்றன. இயற்கை சூழலுடன் அவற்றை கண்டு ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கிலோ ரூ. 10க்கு அவை விற்பனை செய்யப்பட்டும் வருகின்றன.