ஓமலூர், செப்.5- அஞ்சலக சிறுசேமிப்பு முகவர்கள் மற்றும் முதலீட் டாளர்களுக்கு ஊக்க தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு மாநில சிறு சேமிப்பு முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சேலம் மாவட்டம், ஓம லூரில் அஞ்சலக தமிழ்நாடு மாநில சிறுசேமிப்பு முகவர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. இதில் தமிழக அரசால் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்த கடந்த முகவர் ஊக்கத்தொகை திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். முதலீடுகளை பெரு மளவில் உருவாக்கும் வகையில் தமிழக அரசால் ஏற்கனவே வழங்கி வந்த முதலீட் டாளர்கள் ஊக்க பரிசு மற்றும் ஊக்கத் தொகை திட்டங்களை நடைமுறைப் படுத்த வேண்டும். முதலீடு செயல்பாடுகளை வலுவுள்ளதாக மாற்றி சிறுசேமிப்பில் இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. முன்னதாக, இக்கூட்டத்தில் சேலம் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, நாமக்கல் தலைவர் வெங்கடேசலு, வேலுமணி உள் ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண் டனர்.