உதகை, ஜூன் 30- அரசு ஊழியர்களுக்கு நிலுவை யில் உள்ள சம்பளத்தை வழங்கக் கோரி ஜூலை 22ல் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தை முற்றுகையிடு வோம் என நீலகிரி மாவட்ட உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்புக்குழு அறைகூவல் விடுத் துள்ளது. நீலகிரி மாவட்ட உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு பேரவை உதகையில் எம்.அங்கையர்கன்னி தலைமையில் நடைபெற்றது. மாநில அமைப் பாளர் எம்.தனலட்சுமி சிறப்புரை யாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சீதாலட்சுமி, செயலாளர் ஆசிரா, வட்டக்கிளை செயலாளர் கோவிந்தம்மாள் மற்றும் சிஐடியு மாவட்ட செயலா ளர் ஜே.ஆல்தொரை ஆகியோர் வாழ்த்திப் பேசினர். புதிய மாவட்ட ஒருங்கிணைப் புக் குழுவிற்கு 20 பேர் மற்றும் அதன் ஒருங்கிணைப்பாளராக எம்.அங்கையர்கன்னியும் தேர்வு செய் யப்பட்டார்.
தீர்மானங்கள்
தோட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.600 வழங்க வேண்டும். முறைசாரா தொழிலா ளர்களுக்கு ரூ.3 ஆயிரம் பென்சன் வழங்கவேண்டும். அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிலு வையில் உள்ள இரண்டு ஆண்டுக ளுக்கான போனஸ் வழங்க வேண் டும். பெண்கள் பணிபுரியும் இடங் களில் பாலியல் புகார் கமிட்டி அமைக்க வேண்டும். உதகையில் பெண்களுக்கு இலவச கழிப்பிட வசதிசெய்து தர வேண்டும் உள் ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. நிறைவாக சிஐடியு மாவட்ட இணை செயலாளர் எஸ்.இ.முகமது ரபீக் நன்றி கூறினார்.