மூடப்படாத ஆழ்குழாய் கிணறுகளில் குழந்தை கள் விழுந்து உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் மதுரையை சேர்ந்த அப்துல் ரசாக் ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள் ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் 2 வயது ஆண் குழந்தை சுஜித் மூடப்படாத ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்ததும் அவனை மீட்பதற்கு சுமார் 100 மணி நேரம் நடைபெற்ற தொடர் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து அரியானா மாநி லத்தில் ஆழ்குழாய் கிணற்றுக்குள் விழுந்த 5 வயது சிறுமி உயிரிழந்த செய்தி வெளியானது. அகலம் குறுகிய குழாய்க்குள் விழுந்த இளந்தளிர் களின் உடலை முரட்டுத்தனமாகப் பற்றி, வெளியே தூக்குவது இயலாத காரியம். அதனால் குழந்தைகளை பத்திரமாக உயிருடன் வெளியே எடுக்க உரிய உபகரணங்கள் தேவைப்படுகின்றன. இந்நிலையில், மூடப்படாத ஆழ்குழாய் கிணறுகளில் குழந்தை கள் விழுந்து உயிரிழப்பதை தவிர்க்கும் வகையில் மதுரை மாநக ரின், பீபீகுளம் பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக் குடை வடிவில் ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார். ஆழ்குழாய் கிணறுக்குள் மூடப் பட்ட குடையாக தலைகீழாக செலுத்தப்படும் இந்த கருவி, அதில் விழுந்து கிடந்த ஒரு பொம்மையை சேதமேதுமின்றி வெளியே எடுக்கும் செயல்முறை விளக்கத்தை அப்துல் ரசாக் செய்து காட்டினார். தலைகீழாக உள்ளே செலுத்தப் படும் இந்த மெல்லிய குடைபோன்ற கருவி, உள்ளே இருக்கும் பொம் மையை கடந்து சென்ற பின்னர், பொத்தானை இயக்கி குடையை விரிப்பதுபோல் விரிவடையச் செய்ததும் சிக்கியிருந்த பொம்மை விரிந்த குடையின் மீது அமர்ந்த வாறு வெளியே வந்தடைகிறது. இந்த கருவியின் பலனும் பலமும் அடுத்தடுத்த கட்டங்களாக மேலும் சிறப்பாக அமைந்திடும் வகையில் மேம்படுத்தப்பட வேண்டும். இதை உருவாக்கியுள்ள மதுரை அப்துல் ரசாக், ஏற்கனவே இதுபோல் மேலும் பல கண்டுபிடிப்புகளை அறிமுகப் படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.