tamilnadu

நாமக்கல் மற்றும் பென்னாகரம் முக்கிய செய்திகள்

மக்கள் விரோத மத்திய பட்ஜெட்டை கண்டித்து விவசாய தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், மார்ச் 10- மக்கள் விரோத மத்திய பட்ஜெட்டை கண்டித்து செவ்வாயன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழி லாளர் சங்க மாவட்டத் தலைவர் சி.துரை சாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட் டத்தில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு  திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர் களுக்கு  ஆண்டுக்கு 250 நாட்கள் வேலை வழங்க வேண்டும்.   பீடித் தொழிலாளர்களுக்கு  தின கூலியாக ரூ.500 வழங்கிட வேண்டும். மோடி அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும், குடியுரிமை சட்டத் திருத் தத்தை திரும்பப் பெற வேண்டும். அனை வருக்கும் உணவு பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டுமென என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.  ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் வி.பி.சபாபதி, மாவட்ட பொருளாளர் என்.ஜோதி, மாநில குழு உறுப்பினர் எஸ்.சம்பூர்ணம்  உள்ளிட்டோர் கோரிக்கை களை விளக்கி பேசினர்.  

தேசிய செவித்திறன் விழிப்புணர்வு முகாம்

பென்னாகரம், மார்ச் 10- தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய செவித்திறன் விழிப்புணர்வு முகாம் செவ்வா யன்று நடைபெற்றது.  இம்முகாமிற்கு பள்ளி தலைமையாசிரி யர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். உதவித் தலைமையாசிரியர் லட்சுமணன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் பென்னாக ரம் மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர்கள் பாலாஜி, கணேசன், அருண் பிரசாத் மற்றும் கமலக் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு செவித்திறன் குறைபாடு சார்ந்த பிரச்சினைகளைப் பற்றி விளக்கிக் கூறினர்.  மேலும் செவித்திறன் குறைந்த மாண வர்களுக்கு அரசு வழங்கும் திட்டங்கள் பற்றியும் அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் குறித்தும் மருத்துவர்கள் மாணவர்களுக்கு விளக்கிக் கூறினர். நிறைவாக தொழிற்கல்வி ஆசிரியர் கிருஷ் ணன் நன்றி கூறினார்.

இடங்கணசாலை பேரூராட்சி வணிக வளாக கடைக்கு சீல்

ஒரே நாளில் வாடகை பாக்கி ரூ.5.27 லட்சம் வசூல்

இளம்பிள்ளை, மார்ச் 10- இடங்கணசாலை பேரூராட்சி வணிக வளாக கடை களில் வாடகை பாக்கி ஒரே நாளில் ரூ.5.27 லட்சம் வசூல் செய்யப்பட்டது. சேலம் மாவட்டம், இடங்கணசாலை பேரூராட்சிக் குட்பட்ட பகுதியில் வணிக வளாகத்தில் 55  கடைகள்  உள்ளன. இதில், நீண்டகாலமாக29 கடைகள் வாடகை  செலுத்தாமல் இருந்த்து. இதில் ரூ.17.40 லட்சம்  வாடகை நிலுவையில் இருந்தது. இதனால், பேரூராட்சி நிர்வாகம் நிதி நெருக்கடியால், இருந்து வந்தது.  இந்நிலையில், கடை உரிமையாளர்களுக்கு, பேரூராட்சி  நிர்வாகத்தின் சார்பில் கடந்த மூன்று மாதத்தில்  தொடர்ந்து நான்கு முறை நோட்டீஸ் அனுப்பியும், அதனை யாரும் பொருட்படுத்தவில்லை. இதனையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் பால கிருஷ்ணன் தலைமையில் திங்களன்று காலை பேரூராட்சி பணியாளர்கள் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க சென்றனர். மகுடஞ்சாவடி காவல்  துறையினர் பாதுகாப்புடன் ஒரு கடைக்கு சீல் வைக்கப் பட்டது. அப்போது 8 கடைக்காரர்கள் ரூ.5.27 லட்சம் வாடகைப் பாக்கியை செலுத்தினர். மேலும்,  21 கடைக் காரர்கள் ஒரு வாரத்துக்குள் பணம் செலுத்தி விடுவதாக எழுத்து மூலம் உறுதியளித்தனர்.  இடங்கணசாலை பேரூராட்சி நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையால் ஒரே நாளில் ரூ.5.27 லட்சடம் வாடகை பாக்கி வசூலானது பேருந்து நிலைய பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.