நீதிமன்ற தலையீடு எதிரொலி: கோவையில் குடிநீர் கேன்களுக்கு தட்டுப்பாடு
கோவை, மார்ச் 3 - குடிநீர் சுத்திகரிப்பை முறையாக மேற்கொள்ளாத நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற நீதிமன்ற தலையீட்டையடுத்து கோவையில் கேன் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வாட்டர் ஏடிஎம்-ஐ நோக்கி மக்கள் தள்ளப் பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் நிலத்தடி நீரை எடுப்பதற்கான உரிமம் இல்லாத குடிநீர் ஆலைகளை மூட உயர் நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து உரிமம் இல்லாத குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள 52 குடிநீர் ஆலைகளில் 5 மட்டுமே உரிமத்திற்கு விண்ணப்பத்துள் ளன. மீதமுள்ள 47 குடிநீர் ஆலைகள் சீல் வைக்கப்பட்டுள் ளன. இதனிடையே கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கேன் குடிநீர் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவு வதால் குடிநீர் கேன்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கோவை உக்கடம் பேருந்து நிலை யத்தில் குடிநீர் விற்பனை செய்யும் வகையில் துவங்கப் பட்ட வாட்டர் ஏடிஎம்மை நாடுவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி தாரணா என்ற தனியார் நிறுவ னம் மற்றும் மகளிர் சுய உதவி குழுவுடன் இணைந்து இதனை செயல்படுத்தியுள்ளது. இரண்டாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த இயந்திரத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு அதே அளவு தண்ணீர் விநியோகம் செய்ய முடியும். இங்கு கடந்த காலங்களில் குறைந்த அளவில் கேன் தண்ணீர் விற்பனையான நிலையில் தற்போது நிலவும் குடிநீர் கேன் தட்டுப்பாடு காரணமாக விற்பனை அதிகரித் துள்ளதாக அதனை நடத்தும் மகளிர் சுய உதவிகுழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஒகேனக்கல் நீர் வரத்து 1,500 கன அடியாக சரிவு
பென்னாகரம், மார்ச் 3- ஒகேனக்கல் நீர் வீழ்ச்சி யில் 3,500 கன அடியாக வந்து கொண்டிருந்த தண் ணீர், தற்போது 1,500 கன அடியாக சரிந்துள்ளது. கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை யில் இருந்து கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு திறக்கப் பட்ட தண்ணீர் கடந்த பிப்.29 ஆம் தேதியன்று அதி காலை ஒகேனக்கல் நீர் வீழ்ச்சிக்கு விநாடிக்கு 3,500 கன அடியாக வந்து கொண் டிருந்தது. இதன் காரண மாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து மேட் டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. இந்த நிலையில், செவ்வாயன்று ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1,500 அடியாக குறைந்துள் ளது. இதனால், மேட்டூர் அணைக்கு செல்லும் நீர் வரத்தும் குறைந்துள்ளது.
காலமானார்
கோவை, மார்ச் 3- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவரும், மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை மதுக்கரை ஒன்றியக்குழு உறுப்பினருமான வி.பி.இளங்கோவன் அவர் களின் தாயார் வி.பி.நாகம் மாள் பழனியப்பன் செவ்வா யன்று வெள்ளளூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமா னார். இவரின் மறைவு செய்தியறிந்து மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள், விச, விதொச உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர் கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அன்னாரின் இறுதிச் சடங்கு புதன் கிழமை காலை 10 மணிக்கு வெள்ளலூர் மயானத்தில் நடைபெற உள்ளது.