tamilnadu

img

உடுமலை அருகே பேராசிரியை மீது கொலை வெறித்தாக்குதல்

உடுமலை, ஆக. 23- உடுமலை அரசு கல்லூரியில் போராசியை மீது மர்ம ஆசாமிகள் கொலைவெறி தாக்குதல் தொடுத்த நிலையில் அவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், உடுமலை அரசு கலைக்கல்லூரியில் பாண்டிச் சேரியைச் சேர்ந்த சாந்தி மேரி என்பவர் சுற்றுலா துறை பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில்  விடுமுறையை முன்னிட்டு வியாழ னன்று இரவு சாந்தி மேரி பாண்டிச் சேரி செல்வதற்கு உடுமலை பேருந்து நிலையம் சென்று கொண்டு இருக்கும் போது, ராமசாமி நகர் அருகில் மர்ம நபர்கள் உருட்டு கட்டை, கத்தி போன்ற ஆயுதங்களுடன் சாந்தி மேரியை தாக்கியுள்ளனர். இவர் உடனே கூச்சல் எழுப்பவே அருகில் இருந்த பொதுமக்கள் திரண்டு வந்ததைப் பார்த்து மர்ம ஆசாமிகள் இருசக்கர வாகனத்தில் தப்பியோடி விட்டனர்.  இந்நிலையில் பலத்த  காயம் அடைந்த சாந்தி மேரி உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். இது தொடர் பாக மருத்துவமனைக்கு வந்த காவல் துறையினர் சாந்தி மேரியிடம் விசா ரணை நடத்தினர். இதில் முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நடைபெற்றதா அல்லது நகைகளை கொள்ளை அடிக்க நடத்தினார்களா என்ற நோக்கில் உடுமலை  காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.