tamilnadu

img

மருத்துவர்களின் அலட்சியத்தால் தாய், சேய் மரணம்

தருமபுரி அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல்

தருமபுரி, ஆக.4- தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரசவத்தில் தாய், சேய் மரணமடைந்ததை  அடுத்து அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஞாயிறன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம் செக்கோடியைச் சேரந்தவர் காந்தி. இவர் கட்டிட மேஸ்திரி யாக வேலைசெய்துவருகிறார். இவருக்கு கடந்த ஒருவருடத்துக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி ஜோதி (23). நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் ஆக.3ஆம் தேதியன்று அதி காலையில் ஜோதிக்கு பிரசவ வலி ஏற் பட்டது. இதனையடுத்து காந்தி தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அன்று மாலை மருத்துவமனையில் நடைபெற்ற பிரசவத்தில்  ஜோதிக்கு இறந்த நிலையில் பெண்குழந்தை பிறந்தது. சற்று நேரத்தில் ஜோதியும் இறந்தார். இதை யறிந்த உறவினர்கள் மற்றும் ஜோதி யின் கணவரும் அதிர்ச்சியடைந்தனர்.  இதையடுத்து மருத்துவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததாலும், அலட்சியத்தால் தன் மனைவி இறந்தார்  எனவும், இதற்கு காரணமான மருத்துவர் கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென  காந்தி தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். இந்நிலையில் காந்தியின் உறவினர்கள் தருமபுரி அரசு மருத்துவமனையில் குவிந்த னர்.  

மேலும் காந்தி, தனக்கு நடந்த கொடுமை வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. என் மனைவி இறப்புக்கு காரண மான மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என சமூக வலைதளங்களிலும் பதிவிட்டி ருந்தார். இதனால் தருமபுரி அரசு மருத்துவ மனைமுன்பு மக்கள் கூட்டம் குவிந்தது. மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து ஆவேசம டைந்த உறவினர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசு மருத்துவ மனை முன்பு உள்ள தருமபுரி-சேலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சுஜாதா, மறிய லில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தாய் சேய் இறப் புக்கு காரணமான மருத்துவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித் தார். இதன்பின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு வருபவர்கள் தொடர்ந்து தாய் சேய் மரணம் அடைவது அடிக்கடி நடக்கும் நிகழ்வாகிவிட்டது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறையைச் சேர்ந்த குழுவினர் தருமபுரி அரசுமருத்துவமனை யில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர்.