tamilnadu

img

திருப்பூரில் 50க்கும் மேற்பட்ட திரையரங்கங்கள் மூடல்

திருப்பூர், மார்ச் 18- கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கையாக திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட திரைய ரங்கங்கள் மூடப்பட்டன. கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக சினிமா திரையரங்கம், வணிக வளாகங்களை மூடவும், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை  அளித்து ஏற்கனவே உத்தரவிட்டது. இதையடுத்து, திருப்பூர் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட திரையரங்கங்கள் மூடப் பட்டு அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. வணிக வளாகங்கள், பூங்காக்கள் உள்ளிட்டவைகள் காலை யில் இருந்தே திறக்கப்படவில்லை.  மேலும், மருந்து கடைகள், மருத்துவமனைகள், காய் கறி மார்க்கெட்டுகள் மட்டும் வழக்கம்போல் திறக் கப்பட்டன. இதனால் மக்களின் அத்தியாவாசிய தேவை கள் கிடைப்பதில் எந்தவித இடையூறும் ஏற்படவில்லை.