tamilnadu

img

ஐந்தாண்டுகளில் ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாதவர் மோடி

திருப்பூர், ஏப். 6 -திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருப்பூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கே.சுப்பராயன் பெருந்துறை ஒன்றியத்தில் உள்ள 30 கிராம பஞ்சாயஹத்துகளில் வெள்ளியன்று கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிப்பு பயணத்தை மேற்கொண்டார். காலை வாவிக்கடையில் இருந்து துவங்கி ந.கந்தம் பாளையம், ஓலப்பாளையம், காஞ்சிக்கோயில், பள்ளபாளையம் பெத்தாம்பாளையம், நல்லாம்பட்டி சிங்காநல்லூர், வெட்டையங் கிணறு வரையும் மதியம் பாப்பம்பாளையம், போலநாயக்கன்பாளையம், கராண்டிபாளையம், கிரே நகர், பெரிய வீரசங்கிலி, கைக்கோளபாளையம் வழியாக சுள்ளிபாளையம் வரையும் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.இந்த பிரச்சார பயணத்தில் பேசிய வேட்பாளர் கே.சுப்பராயன், ஜனநாயக நெறிமுறைகளை மீறுவதுதான் மோடியின் குணம், மோடி இந்திய வடிவிலான பாசிசத்தை கடைபிடிக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மோடி கொடுத்த ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை. மாற்று அரசியல் இயக்கத் தலைவர்களான பினராயி விஜயன், மம்தா மற்றும் நடிகை தீபிகா ஆகியோரின் தலைக்கு விலை வைத்துத் பேசுபவர்கள் அவர்கள் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள். ஆனால் மோடி இது குறித்து எவ்வித கருத்தும் கூறாமல் அமைதியாக இருக்கிறார். திருப்பூர் மக்களவைத் தொகுதியில் கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள் என்று அவர் பேசினார்.இந்த பிரச்சார பயணத்தில் திமுகஒன்றிய செயலாளர் கே.பி.சாமி, திமுக விவசாய அணி செயலாளர் சி.பெரியசாமி, காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் மக்கள் ஜி.ராஜ், தெற்கு ஒன்றிய தலைவர் பி.ராவுத் குமார், வடக்கு ஒன்றிய தலைவர் என்.ஆண்டமுத்துசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.துரைராஜ், வட்ட செயலாளர் கே.குப்புசாமி, மறுமலர்ச்சி திமுக ஒன்றிய செயலாளர் வி.எம்.கந்தசாமி, காளியப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாகுணவளவன், இரா.அம்பேத்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.ஆர்.திருநாவுக்கரசு, ஏஐடியுசி மாவட்ட செயலாளர் எஸ்.சின்னசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

;