tamilnadu

பஞ்சு விலை உயர்ந்ததால் மில் உரிமையாளர்கள் கலக்கம்

கோவை, ஆக.18- பஞ்சு விலை இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே அதிகரித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் பஞ்சு விலை அதிகரித்திருப்பது ஜவு ளித்துறையினரை கலக்கமடைய செய்துள்ளது. ஜவுளித்துறைக்கு அத்தியாவசிய மூலப்பொருட் களாக பருத்தி பயிர் உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 3.5 கோடி பேல் பருத்தி நாட்டில் விளைகிறது. ஏற்றுமதி தவிர 2.5 கோடி முதல் 2.8 கோடி பேல் பருத்தி உள்நாட்டில் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் ஏற்றுமதியாகும் ஆயத்த ஆடைகளால் நாட்டிற்கு கனிசமான அந்நிய செலாவணி கிடைக்கிறது. அக்டோபர் முதல் செப்டம்பர் மாதம் வரை பருத்தி ஆண்டு கணக்கிடப்பட்டு வருகி றது. அதன்படி, ஒவ்வொரு பருத்தி ஆண்டிலும் தமிழக நூற்பாலைகள் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான பஞ்சு பேல்களை மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங் களில் இருந்து வாங்கி வருகின்றன. அதன்படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலை கொள்கையினால் ஒரு கண்டி ரூ.45 ஆயிரத்தில் தொடங்கியது. நவம் பரில் ரூ.47 ஆயிரத்தை தொட்டது. தொடர்ந்து  பஞ்சுவிலை அதிகரித்து வந்ததால் ஜவுளித்துறை யினர் மிகுந்த நெருக்கடிக்கு ஆளானார்கள். இந்நிலையில், பருத்தி விலை படிப்படியாக குறைந்து கடந்த ஜூலையில் ரூ.42 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது மீண்டும் பஞ்சு விலை அதிகரித்துள்ளது. கடந்த 15 நாட்களில் ஒரு கண்டிக்கு ரூ.2 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஜவுளி தொழில் கூட்டமைப்பான இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேசனின் ஒருங் கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கூறியதாவது: தற்போது ரூ.44 ஆயிரத்திற்கு பஞ்சு விற்பனை யாகிறது. போக்குவரத்து செலவுடன் இங்கு வரும்போது ரூ.45,500 ஆகிறது. விலையேற்ற இறக்கத்தால் நடப்பாண்டில் 20-25 சதவிகிதம் நூல் உற்பத்தி குறைந்துள்ளது. இந்த நெருக்கடி நிலையை சமாளிக்க நூற்பாலைகள் நூல் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளன. இந்த வார தொடக்கத் திலேயே சில ரக நூல்கள் விலை அதிகரித்துள்ளது. மற்ற நாடுகளில் பருத்தி விலை குறைந்தும் இந்தி யாவில் விலை ஏற்றத்திலேயே இருந்து வருகிறது. இதனால் ஜவுளி பொருட்கள் ஏற்றுமதியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி வியட்நாம், பங்களாதேஷ் போன்ற நாடுகள் ஏற்றுமதியை அதிகரித்துவிட்டன. இங்கு உற்பத்தி குறைவால் ஏற்கனவே நூல் பற்றாக்குறை ஏற்பட துவங்கியுள்ளது. பருத்தி விளைச்சலை ஒரு ஹெக்டேருக்கு ஆயிரம் கிலோவாக உயர்த்து வது. விவசாயிகளுக்கு நேரடி மானியம் கிடைக்கச் செய்வது போன்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி பருத்தி விளைச்சலை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர்  தெரிவித்தார்.