தமிழகத்தில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படுவதை கண்டித்து மேட்டூர் தாலுகா அலுவலகம் முன்பு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்களன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில முதன்மை துணைத் தலைவர் ராஜசேகரன் தலைமை வகித்தார். இதில், மாநில அமைப்பு செயலாளர் அங்குராஜ், கோவை மாவட்ட செயலாளர் ராஜா, தருமபுரி மாவட்டச் செயலாளர் சிவகுமார், அகில இந்திய செய்தித்தாள் தொழிலாளர்கள் சம்மே ளனத்தின் பொதுச் செயலாளர் உட்பட ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்து கொண் டனர்.