மேட்டுப்பாளையம், செப்.14- மேட்டுப்பாளையம் உதகை இடையிலான நெடுஞ்சாலையோர மரங்களில் தனியார் நிறுவனங்களால் ஆணியடித்து மாட்டப்பட்டுள்ள விளம்பரங்களால் இயற்கை சூழல் பாழ்படுத்தப்படுவதாக சமூக ஆர் வலர்கள் வேதனையடைந்துள் ளனர். நீலகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் நகரில் இருந்து உதகை செல்லும் சாலையின் இருபுறமும் அடுக்கி வைத் தார் போல் பல வகை காட்டு மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. வனம் சார்ந்த பகுதியில் மக்களின் போக்குவரத்து வசதிக்காக போடப்பட்ட சாலை என் பதால் இங்கு ஐம்பது முதல் நூறாண் டுகளையும் கடந்த வலிமையான பெரிய மரங்கள் உள்ளன. சுமார் முப்ப தடி முதல் நூறு அடி வரை உயரமாக வளர்ந்து நின்று காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தி வரும் இம்மரங்களை சேதாரமின்றி காப்பது அனைத்து தரப்பு மக்களின் கடமை. ஆனால், இதற்கு மாறாக மேட்டுப் பாளையம் முதல் கல்லார் வரையி லான சாலையோர மரங்களில் ஏராள மான விளம்பர தட்டிகள் மற்றும் பல கைகள் வைக்கப்பட்டுள்ளன. குறிப் பாக, இவ்வழியே செல்லும் சுற்றுலா பயணிகளின் கவனத்தை கவர்ந்து தங்களது வருவாயை பெருக்கிக் கொள்ளும் வகையில் தனியார் உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் உள்பட ஏராளமான விளம்பர தட்டி கள் மரங்களின் மீது ஆணியடித்து மாட்டப்பட்டுள்ளன. இதனால் காயம்பட்ட மரங்களின் இயல்பான வளர்ச்சி தடைபட்டு அதன் வாழ்நாள் குறைந்து விரைவில் பட்டுப்போய் சாய்ந்து விடுகின்றன. இதேபோல், இவ்வழியே கடந்து செல்லும் காட்டு யானைகள் சாலையை ஒட்டியுள்ள தங்களது தோட்டங்களுக்குள் புகுவதை தடுக்கும் வகையில் பல இடங்களில் சாலையோர மரங்களின் மீது இரும்பு கம்பி வேலிகள் மற்றும் ஒயர்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் சுயலா பதிற்காக சிலர் சுற்றுச்சூழலை பாழ் படுத்தும் வகையில் இயற்கைக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடு படுவதை தடுத்து மரங்களை காப் பாற்ற நடவடிக்கை எடுக்க வேண் டும் என்பதே இப்பகுதி சமூக ஆர் வலர்களின் கோரிக்கையாக உள்ளது. முன்னதாக, பொது இடங்கள் மற்றும் சாலையோர மரங்களில் விளம்பரம் வைத்து மரங்களை சேத மாக்கினால் சம்பந்தப்பட்டவர் களுக்கு மூன்றாண்டு சிறை தண் டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபரா தம் விதிக்கப்படும் என அண்மை யில் சென்னை மாநகராட்சி எச்ச ரிக்கை விடுத்துள்ளது. இதேபோல் மேட்டுப்பாளையம் பகுதி இயற்கை வளங்களான மரங்களை காக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை எனவும் வலியுறுத்துகின் றனர்.