திருப்பூர், டிச. 13 - திருப்பூர் மாவட்டத்தில் இடுவாய் ஊராட்சிமன்றத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு ஊரக உள்ளாட்சி இடங்க ளுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வெள்ளியன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். திருப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இடுவாய் கிராம ஊராட்சித் தலைவர் பொறுப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திருப்பூர் தெற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் கே.கணேசன் வெள்ளியன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இடுவாய் கிராம ஊராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே.ரத்தினசாமி 1996, 2001 ஆகிய இரு முறை ஊராட்சிமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப் பான முறையில் மக்கள் பணியாற்றினார். அதுவும் மக்கள் முன்னணி என்ற பெயரில் உள்ளூரின் ஆதிக்க சக்திகள், அனைத்துக் கட்சியினரை சேர்த்துக் கொண்டு மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக களம் கண்டபோதும், மக்களுடன் உண்மை யான கூட்டணி கொண்டு மார்க்சிஸ்ட் கட்சியின் கே.ரத்தின சாமி அசைக்க முடியாத சக்தியாக வெற்றி பெற்றார். அவரை 2002ஆம் ஆண்டு ஆதிக்க சக்தியைச் சேர்ந்தோர் ரகசிய சதிச் செயல் செய்து படுகொலை செய்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இடுவாய் ஊராட்சி மார்க்சிஸ்ட் கட்சியின் வலுமிக்க தளமாகத் திகழ்ந்து வரும் நிலையில் இந்த உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளரை நிறுத்துவது என்று தீர்மானித்தது. அதன்படி மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் கே.கணேசன் வெள்ளி யன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இடுவாய் கிராம ஊராட்சிக்கான உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். முன்னதாக இடுவாய் கிராமத்தில் உள்ள தியாகி கே.ரத் தினசாமியின் நினைவிடம், அதே ஊராட்சிக்கு உட்பட்ட சீராணம்பாளையத்தில் உள்ள தியாகி பழனி்சாமி நினைவி டம் ஆகிய இடங்களில் கே.கணேசன் தியாகிகளுக்கு மல ரஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சி அணியினர் பெருந்திரளானோர் பங்கேற்றனர். வேட்பு மனுத் தாக்கல் நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப் பினர் கே.உண்ணிகிருஷ்ணன், தெற்கு ஒன்றியச் செயலா ளர் சி.மூர்த்தி, தியாகி ரத்தினசாமியின் தம்பியும், கட்சியின் இடுவாய் கிளைச் செயலாளருமான கே.கருப்பசாமி, கிளைச் செயலாளர் ஏ.கே.குமரவேல் மற்றும் அ.ப.பாலன் உள்பட கட்சி அணியினர் உடன் வந்திருந்தனர்.
திருப்பூர் ஊராட்சி ஒன்றிய 5ஆவது வார்டு
அதேபோல் திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் 5ஆவது வார்டுக்கு திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மார்க் சிஸ்ட் கட்சி வேட்பாளராக, கட்சியின் வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.அப்புசாமி போட்டியிடுகிறார். திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு களுக்கான உதவித் தேர்தல் அலுவலரிடம் வெள்ளியன்று எஸ்.அப்புசாமி வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவரு டன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், ஒன்றியச் செயலாளர் கே.பழனிச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் கே.மாரப்பன், ஏ.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இது தவிர ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு உட்பட்ட நடுப்பட்டி ஊராட்சியில் 4ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்புக்கு மீராலட்சுமி, 6ஆவது வார்டுக்கு மதி ஆகி யோர் மார்க்சிஸ்ட் கட்சியினருடன் சென்று வாக்களித்த னர். சிஐடியு இன்ஜினியரிங் சங்க மாவட்டச் செயலாளர் ஜெ.கந்தசாமி, சங்கப் பொருளாளரும் முன்னாள் வார்டு உறுப்பினருமான வி.காமராஜ் உள்ளிட்டோர் உடனிருந்த னர். திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் வள்ளிபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முருகேசன் கடந்த புதன்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார். இது தவிர மாவட்டத்தின் பல்வேறு கிராம ஊராட்சிகளில் வார்டு உறுப்பினர்கள் பொறுப்புக்கு அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களில் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். அவிநாசி ஒன்றியத்தில் வேலாயுதம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மயங்காத்தாள் சாமியப்பன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் எஸ்.வெங்கடா சலம், மாவட்ட குழு உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி, விசைத் தறி தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி பழனிசாமி, தமிழ் நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் முத்து ரத்தினம் மற்றும் முத்து ராயப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.