கோவை, ஜூலை 6 – மின் வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களில் ஒப்பந்த தொழிலா ளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் பல்வேறு இடங் களில் சனியன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஒக்கி புயல், கஜா புயல் போன்ற பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்க இரவு, பகல் பாராமல் பணி யாற்றியவர்கள் ஒப்பந்த ஊழியர்களாவர். ஆனால் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழி யர்கள் இல்லை என பொய்யான தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆகவே அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் உடனடியாக பணி நிரந்தரப்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். மின் நீட்டிப்பு மற்றும் விஸ்தரிப்புப் பணிகளுக்கு ஒப்பந்த ஊழியர்களையே பயன்படுத்த வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சனியன்று சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மின் ஊழியர் மத்திய அமைப் பின் சார்பில் மாநகர செயலாளர் செபஸ் டியன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் கோபாலகிருஷ்ணன், மண்டல செயலாளர் மதுசூதனன், தெற்கு செயலாளர் காளிமுத்து ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர். இதில் ஏராளமான மின் ஊழியர்கள் பங் கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். முடிவில் வடக்கு செயலா ளர் மணிகண்டன் நன்றி கூறினார்.
ஈரோடு
ஈரோடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பெருந்துறை கோட்ட செயலாளர் பி.கந்தசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.சுப்ரமணியன், கிளை செயலாளர் ஜோதிமணி, கிளை தலைவர் பெரியசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசி னர். இதில் கோட்ட நிர்வாகி குமார் உட்பட திரளானோர்கள் பங்கேற்றனர்.
நாமக்கல்
நாமக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு நாமக்கல் வட்ட கிளை பொருளாளர் கே.முருகேசன் தலைமை வகித்தார். ஈரோடு மண்டல செயலாளர் ஜோதிமணி, சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி, மின் திட்ட கிளை செயலாளர் எஸ்.கோவிந்தராஜ், ஓய்வு பெற்றோர் சங்க செயலாளர் எம்.காளியப்பன், கோட்ட பொருளாளர் எல்.பி.கண்ணன், துணைத் தலைவர் சௌந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.