tamilnadu

img

வனத்திற்குள் கழிவுகளை கொட்டிய லாரி சிறைபிடிப்பு ரூ.2.40 லட்சம் அபராதம் விதிப்பு

மேட்டுப்பாளையம், அக்.31- மேட்டுப்பாளையம் அருகே சட்ட  விரோதமாக வனப்பகுதிக்குள் நுழைந்து பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டிய லாரி சிறைபிடிக்கப்பட்டு, ரூ.2.40 லட்சம் அபராதம் விதிக்கப் பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் மலைப்பாதையின் இரு  புறமும் அடர்ந்த காடுகள் அமைந் துள்ளன. வனத்தை ஊடுருவி செல்லும் இச்சாலையில் பயணிக்கும் சிலர் தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பை களில் அடைக்கப்பட்டு வரும் திண் பண்டங்களை வனத்திற்குள் வீசி செல்கின்றனர். இதனால் வனத்தின் தன்மை பாதிக்கப்படுவதோடு இதனை உண்ணும் வன உயிரி னங்கள் உயிரிழக்கும் சூழல் ஏற்படு கிறது. இதனை தடுக்க வனத்துறை யினர் தீவிர நடவடிக்கை எடுத்து வரு கின்றனர். இந்நிலையில், இப்பகுதி களில் இயங்கும் சில தனியார் நிறுவ னங்கள் தங்களது ஆலை கழிவுகளை வனப்பகுதிக்குள் ரகசியமாக கொட்டி  வருவதாக புகார் எழுந்தது. இதனை யடுத்து வனம் சார்ந்த பகுதிகளை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், மேட்டுப்பாளை யத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையின் ஓரமுள்ள காட்டினுள் லாரி யினை நிறுத்தி அதனுள் இருந்த கழிவு களை சிலர் கொட்டி வருவதை வனத் துறையினர் கண்டனர். இதையடுத்து உடனடியாக லாரியினை சுற்றி வளைத்து பிடித்த வனத்துறையினர், லாரி மற்றும் அதில் இருந்தவர்களை சிறுமுகை வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர், வனச் சரக அலுவலர் மனோகரன் தலைமை யிலான குழுவினர் லாரியில் மூட்டை மூட்டையாக கட்டி வைக்கபட்டிருந்த கழிவு பொருட்களை பிரித்து ஆய்வு நடத்தினர்.  இதில் மருத்துவ கழிவுகளான ஊசிகள், மருந்துகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், ரப்பர்  கழிவுகள், காகிதங்கள் உள்ளிட்ட  கழிவுகள் இருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. இதனையடுத்து கழிவு களை அனுப்பி வைத்த குன்னூரில் இயங்கி வரும் தனியார் நிறுவன உரிமையாளர் மற்றும் அதனை ஏற்றி வந்த லூயிஸ், மாணிக்கம், ராஜ்குமார் என மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர்புடைய மூன்று பேருக்கும் அபராதமாக ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் விதிக்கப்பட்டது. மேலும்,  வனத்தின் இயற்கை சூழலையும் அதில் வாழும் வன உயிரினங்களையும் பாதிக்கும் வகையில் ஆபத்தான கழிவு களை காட்டுக்குள் அத்துமீறி கொட்டு வோர் மீது வரும் காலங்களில் கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.