tamilnadu

img

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பகிங்கரமாக மன்னிப்பு கேட்க வேண்டும்

கோவை, ஆக. 13- காவல் ஆய்வாளரை தர குறைவாக பேசிய காஞ்சி புரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மன்னிப்பு கோர வில்லை எனில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என முன்னாள் காவல்துறை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.  முன்னாள் காவல்துறை சங்கம் மற்றும் முன்னாள் காவல்துறை அறக்கட்டளை சார்பில் கோவை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்கள் சந்திப்பு செவ்வாயன்று நடைபெற்றது. அப்போது அச்சங்கத்தின் தலைவரான ஓய்வுப்பெற்ற டி.எஸ்.பி. வெள்ளியங்கிரி பேசுகையில், காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் பாதுகாப்பு பணி யிலிருந்த ரமேஷ் என்கிற காவல் ஆய்வாளரை, காஞ்சி புரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா பொதுமக்கள் நூற்றுக்கணக்னோர்  முன்னிலையில் தரக்குறைவாக மனிதாபிமான மற்ற முறையில் பேசியுள்ளார். இது சம்பந்தப் பட்ட காவலருக்கு ஏற்பட்ட அவமானம் மட்டுமின்றி காவல்துறைக்கே அவமானம் ஏற்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் ரமேஷ் விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கேட்க வேண்டும். சாதாரண மனிதரை கூட பேச முடியாத வார்த்தைகளை சட்டம் ஒழுங்கு பாதுகாக்கும் ஆய்வா ளரை மாவட்ட ஆட்சியர் இதுபோன்ற பேசுவது அனைவ ரையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது. மேலும், ஆய்வா ளர் குடும்பத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தால் காவல்துறையை சார்ந்தவர்கள் கொதிப் படைந்து உள்ளனர்.  இச்சம்பவம் தொடர்பாக ஒரு காவல்துறை அதிகாரிகள் கூட கண்டனம் தெரிவிக்காதது அதிர்ச்சியாக உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தங்களது அமைப்பின் சார்பில் கண்டனத்தை தெரிவிக்கிறோம். மேலும்,  சட்ட ரீதியாக பொது நல வழக்கு தொடர உள்ளதாகவும் முதல்வர், டி.ஜி.பி மற்றும் முதன்மை செயலாளர்,உயர் நீதிமன்ற நீதிபதிக்கு மனு அளிக்க உள்ளோம்.  மேலும், வி.ஐ.பி. பாஸ் மாவட்ட ஆட்சியரால் வழங்கப் பட்டாலும் ஒருவரை அனுமதிக்கும் உரிமை சட்டப்பூர்வ மாகவே அங்கு பணியில் உள்ள ஆய்வாளருக்கு தான் உண்டு. இவ்வாறு சூழ்நிலைகேற்ப முடிவு எடுக்கும் காவல்துறை அதிகாரிகளை இப்படி தரக்குறைவாக நடத்தியது கண்டனத்திற்குரியது என்றனர்.