பொள்ளாச்சி, அக். 22- பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக்காரன் புதூர் தம்மம் பதி கிராமத்தில் தனியார் அறக் கட்டளையினால் ஏமாற்றப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் வீடு கள் கட்டித் தர நடவடிக்கை எடுக் கப்படும் என ஆனைமலை வட் டாட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் உறுதி யளிக்கப்பட்டது. கோவை மாவட்டம், ஆனை மலை தாலுகா வேட்டைக்காரன் புதூர் பேரூராட்சிக்குட்பட்டு தம் மம்பதி கிராமம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 2017ஆம் ஆண்டில் வாகை சேவை அறக்கட்டளை எனும் தனியார் அறக்கட்டளை அரசின் அனைவருக்கும் திட்டத் தின் மூலமாக வீடுகள் கட்டித்தருவ தாக கூறி, 113 பேரிடம் வங்கி கணக்கு புத்தகம், ஏடிஎம் கார்டு கள், வீட்டு ஒதுக்கீடு பணி ஆணை ஆகியவற்றை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக கூறப்படு கிறது. இதையடுத்து, தரமற்ற நிலை யிலும், முறையற்ற அளவிலும் பாதுகாப்பற்ற வகையில் வீடுகள் கட்டிய வாகை சேவை அறக்கட் டளை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடி மக்களை ஏமாற்றி, அரசு நிதியையும் அபக ரிக்கும் விதத்தில் பணியாற்றுகிற வேட்டைக்காரன் புதூர் பேரூ ராட்சி செயல் அலுவலர் மற்றும் கட்டிடப் பொறியாளர் மீது உரிய நடவடிக்கை வேண்டும். பயனாளி களிடமிருந்து பெறப்பட்ட ஏடிஎம் கார்டுகள், வங்கி கணக்கு புத்தகம், பட்டா, பணியானை ஆகிய வற்றை திரும்பப் பெற்று பயனாளி களிடமே தர வேண்டும் என வலியு றுத்தி அக்கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த னர்.
இதனைத்தொடர்ந்து புத னன்று மாலை ஆனைமலை வட் டாட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில், பழங் குடியின மக்களின் வீடுகளின் அஸ் திவாரங்களுக்கு மாற்றாக அரசு நியமிக்கும் பொறியாளரைக் கொண்டு தரமான முறையில் அஸ் திவாரம் அமைக்கப்படும். இதே போல், பழங்குடியின மக்களின் மற்ற அனைத்து கோரிக்கைக ளும் உடனடியாக நிறைவேற்றப் படும் என வட்டாட்சியர் வெங்க டாச்சலம் உறுதியளித்தார். முன்ன தாக இந்த பேச்சுவார்த்தையில், ஆனைமலை துணை வட்டாட்சி யர் வாசுதேவன், வருவாய் ஆய்வா ளர் செல்லதுரை, செயல் அலுவ லர் ரேனுகாதேவி, காவல் சிறப்பு உதவியாளர் சந்திரன், வாகை சேவை அறக்கட்டளை நிறுவ னர் ரவிச்சந்திரன் மற்றும் மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை மாவட் டக்குழு உறுப்பினர் ஏ.துரைசாமி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங் கத்தின் கோவை மாவட்டத் தலை வர் வி.எஸ்.பரமசிவம் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் பலர் கலந்து கொண்டனர்.