tamilnadu

img

நொய்யல் ஆற்றில் கழிவுநீரை வெளியேற்றிய எட்டு செப்டிக் டேங்க் லாரிகள் பறிமுதல்

திருப்பூர், ஜூலை 4- திருப்பூர் நொய்யல் ஆற்றில் மனித கழிவு மற்றும்  சாய ஆலை கழிவுகள் கலப் பதாக எட்டு செப்டிக் டேங்க்  லாரிகளை மாநகராட்சி நிர் வாகம் பறிமுதல் செய் துள்ளது. கோவை மேற்குத் தொடர்ச்சி மலை வெள்ளி யங்கிரி மலை பகுதியில் உற்பத்தியாகும் நொய்யல் நதி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைக் கடந்து கரூர் மாவட்டத்தில் நொய்யல் என்ற கிராமம் அருகே காவிரி ஆற்றுடன் சென்று சேர் கிறது. ஏற்கெனவே நொய்யல் ஆற்றில் கோவை, திருப்பூர் உள்பட மாநகரங்கள் மற்றும் வழியோர ஊர்களில் இருக்கும் கழிவு நீர் வெளியேற்றப்பட்டும், குப்பைகள் கொட்டப்பட்டும் மாசடைந்துள்ளது. அத் துடன் திருப்பூர் சாயஆலைக் கழிவுநீர்  பெருமளவு இந்த ஆற்றில் வெளியேற்றப் பட்டு, உயிர்ப்பில்லாத ஆறாக மாற்றப் பட்டுவிட்டது. நொய்யல் ஆற்றை மீட்க பல்வேறு தரப்பினரின் விழிப்புணர்வு, தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் இன்னும் இந்த ஆற்றை மாசுபடுத்தும்  நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக் கின்றன. குறிப்பாக  நொய்யல் ஆற்றில்  சாயக் கழிவுகள் மற்றும் மனிதக் கழிவு களை இரவு நேரங்களில் முறைகேடாக கலப்பதாக திருப்பூர் மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டி ருந்தன. எனவே நொய்யல் கரையோரம் கண் காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாநக ராட்சி நிர்வாகம், ஆற்றங்கரையோரம் மனிதக் கழிவுகளை கொட்டியதாக எட்டு செப்டிக் டேங்க் லாரிகளை பறிமுதல் செய் தனர். முறைகேடாக இதுபோல் செயல் படுவோர் மீது  தொடர் நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.