நாடாளுமன்றத்தில் எஸ்.செந்தில்குமார் எம்.பி., ஆவேசம்
தருமபுரி, டிச.13- மனித கழிவுகளை அகற்றுவ தற்கு, மனிதர்களை பயன்படுத்தும் முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டுமென நாடாளுமன்றத்தில் டாக்டர் செந்தில்குமார் எம்.பி., பேசி னார். இதுதொடர்பாக,வெள்ளி யன்று நாடாளுமன்ற கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த தருமபுரி நாடா ளுமன்ற உறுப்பினர், டாக்டர் செந்தில்குமார் பேசியதாவது, மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவ லம் இந்நாட்டில் இன்னமும் நீடித்து கொண்டிருப்பதை இந்த சபை அறி யும் என்றே நம்புகிறேன். இந்த சமூக கொடுமையில் சிக்கி, உயிரை விடு வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது. இது ஒரு தேசிய அவமானம். மனித தன் மையற்ற இந்த செயல் இன்னமும் நாடெங்கிலும் உள்ளது. அதுவும், இந்த பணியை ஒரு குறிப்பிட்ட பிரி வினர் மீது, இந்த சமூகம் திணித்து வேடிக்கை பார்ப்பதும் முற்றிலும் துயரமானது. சமீபத்தில், சென்னை யில் உள்ள பிரம்மாண்டமான வணிக வளாகத்தில் இந்த அவ லத்தால் ஒருவர் உயிரிழந்தார். இது போன்ற வணிக வளாகத்தை நடத் தும் வசதிபடைத்தவர்கள் மனித கழி வுகளை அகற்றுவதற்கான இயந் திரங்கள் வாங்குவதற்கு முன்வர வேண்டும். ஆகவே, மனித கழிவுகளை அகற் றுவதற்கு மனிதர்களை பயன்ப டுத்தும் முறை முற்றிலுமாக ஒழிக்கப் பட வேண்டும்.மேலும்,100சத விகித அளவுக்கு, இயந்திரங்கள் வாயிலாகவே,கழிவுகளை அகற்று வதற்குண்டான வழிமுறைகளும், நடைமுறைகளும், மத்திய அரசிடம் இருக்கிறதா? இல்லையா? என் பதை அறிய விரும்புகிறேன். மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவ லம் நீடித்து, இனிமேலும், ஒரு உயிர்ப்பலி கூட நடந்துவிடக்கூ டாது. அதற்கான பணியில் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.