கோவை, ஆக.10- கோவையில் கடந்த 3 தினங்களாக கனமழை பெய்து வந்தது. அதிகாலை தொடங்கி இரவு வரை மழைப்பொழிவு இருந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த இரு நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மழை நீர் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி நின்றதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதன் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், வெள்ளியன்று நிலவரப்படி கோவை மாவட்டத்தில் 630.9 மி.மீட்டர் மழை பதிவானது. இதில் அதிகபட்சமாக சின்னக்கல்லார் பகுதியில் 132 மி.மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக அன்னூர் பகுதியில் 4 மி.மீட்டர் மழையும் பதிவாகியிருந்தது. சனியன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான தூரல் மழை மட்டுமே பெய்து வந்தது. இந்நிலையில், கோவையில் கனமழைக்கு வாய்ப்பில்லை என்று வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பல்கலை.,யின் பயிர் மேலாண்மை துறை இயக்குநர் கீதாலட்சுமி கூறுகையில், கோவையில் அடுத்து வரும் நாட்க ளில் கனமழைக்கு வாய்ப்பில்லை. அடுத்தடுத்த நாட்களில் தூரல் மழையே பெய்யும். ஒரு சில இடங் களில் மட்டும் லேசான மழையை எதிர்பார்க்கலாம். நீலகிரி மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் பரவ லான மழைக்கு வாப்புள்ளது. என்றார்.