கோவை, டிச. 14 – மக்களின் வரிப்பணத்தில் கட்டிய தண்ணீர் தொட்டியில் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க அந்நிய நாட்டு சூயஸ் நிறுவனத்திடம் கையேந்த வேண்டுமா என்ற முழக்கத்துடன் கோவையில் குடிநீர் மேல்நிலைத் தொட்டியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய திமுகவினர் கைது செய்யப்பட்டனர். கோவை, புலியகுளம் பகுதியில் மாநகராட்சி சார்பில் குடிநீர் மேல் நிலைத்தொட்டி கடந்த 40 ஆண்டுக ளுக்கு முன்பாக கட்டப்பட்டது. வீடுக ளுக்கு தண்ணீர் வராத நேரத்தில் இந்த தொட்டியில் பொதுமக்கள் அவ் வப்போது வந்து தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்த தொட்டி யில் தண்ணீர் பிடிக்க அனுமதி மறுக் கப்பட்டு வருகின்றது. கோவை மாநக ராட்சியால், குடிநீர் விநியோக உரிமை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதால் தண்ணீர் பிடிக்க அனுமதிக்க முடியாது என இங்குள்ள ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் கோவை மாநக ராட்சி ஆணையரிடம் புகார் அளித் தனர். இதனைத்தொடர்ந்து மேல்நிலை நீர்தேக்க தொட்டியினை சனியன்று திமுகவினர் காலிக்குடங்களுடன் முற் றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட் டனர். அப்போது, சூயஸ் நிறுவனத் திற்கு தண்ணீர் விநியோக உரிமை வழங்கப்பட்டதை கண்டித்து முழக் கங்கள் எழுப்பினர். இதனையடுத்து, மாநகராட்சி பொறியாளர் ஜோதி விநாயகம் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப் போது, எங்கள் வரிப்பணத்தில் கட் டிய தண்ணீர் தொட்டியை அந்நிய நாட்டிற்கு அடகுவைப்பதா என்றும், எங்கள் தண்ணீர் தேவைக்கு சூயஸ் நிறுவனத்திடம் கையேந்த வைப்பதா என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து உயரதிகாரிக ளின் அனுமதியை பெற்று தண்ணீர் பிடித்து கொள்ள நடவடிக்கை எடுக் கப்படும் என அதிகாரிகள் உறுதிய ளித்தனர். இதனையடுத்து திமுகவி னர் கலைந்து செல்ல முயன்றனர். இச் சூழலில் அனுமதியின்றி ஒன்று கூடி பொது மக்களுக்கு இடையூறு ஏற்ப டுத்தியதாக கூறி திமுக பகுதி கழக செயலாளர் சேதுராமன், கிளை கழக செயலாளர் சந்திரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் திடீரென கைது செய்த னர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.