“இந்த மாநாட்டை நடத்திய உங்களைப் பற்றி சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டீர்கள். கூட்டுச் செயல்பாட்டைக் கற்றுக் கொடுத்தீர்கள் தோழர்களே!” என்று தமிழ்நாடு கட்டிட கட்டு மானத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் டி.குமார் சொல்லி முடிக்கும்முன் அந்த அரங்கம் கர வொலியால் அதிர்ந்தது! சிஐடியு திருப்பூர் மாவட்ட 12 ஆவது மாநாடு கடந்த ஜூன் 29, 30 தேதிகளில் ஊத்துக்குளியில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. வியாழக்கிழமை மாநாட்டை நடத்தி முடித்த வரவேற்புக்குழுவினருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில்தான் இது நடந்தது. மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் ஆர்.குமார் நன்றி அறி விப்புக் கூட்டத்துக்கு தலைமை ஏற்று, மாநாட்டை நடத்தி முடித்த அனுபவத்தை விரிவாக எடுத்து ரைத்தார். வெகுமக்கள் ஆதரவோடு வெற்றிகரமாக நடந்த இம்மாநாட் டைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் தொழிலாளர்கள் சங்க அலுவலகத்திற்கு வந்து சங்க உறுப் பினராகச் சேர சந்தா வழங்கும் நிகழ்வுகள் நடந்து வருவதை எடுத்து ரைத்தார். இம்மாநாட்டை நடத்திய அனுப வங்கள் குறித்து வரவேற்புக் குழுவில் பணியாற்றிய பொதுத் தொழிலாளர் சங்கச் செயலாளர் பெரியசாமி, பனியன் சங்கச் செய லாளர் வி.கே.பழனிச்சாமி, இன்ஜி னியரிங் சங்கப் பொருளாளர் வி. காமராஜ், வரவேற்புக்குழுச் செய லாளர் ஜெ.கந்தசாமி உள்ளிட்டோர் பகிர்ந்து கொண்டனர். அத்துடன் சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் சி.மூர்த்தி, மார்க்சிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி தாலுகா செயலாளர் சிவசாமி ஆகி யோர் வாழ்த்திப் பேசினர்.
மாவட்ட மாநாட்டில் பங்கேற்ற சங்கத் தின் அகில இந்தியத் துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் எல்லா வகையிலும் இம்மாநாடு வெற்றி கரமாக நடந்ததாக தெரிவித்த தாக இங்கு பொருத்தமாக எடுத்து ரைத்தனர். இதைத் தொடர்ந்து சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் எம்.சந்திரன் ஆகியோர் இம் மாநாடு நடத்தப்பட்ட விதம் மற்றும் இன்றைய அரசியல் சூழல் குறித்து விரிவாக எடுத்துரைத்து, இம் மாநாட்டின் வெற்றியைக் குறிப் பிட்டனர். செங்கொடி இயக்கத்திற்கு எதிர் காலம் இல்லை என்று பிரச் சாரம் செய்யப்பட்டு வருகிறது. நாங்கள் வலுவோடு இருக்கிறோம் என பறை சாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. இத்தகைய நெருக் கடியான சூழலில் மக்களிடம் வீடு, வீடாக நிதி வசூலித்து இம் மாநாட்டை நேர்த்தி, ஒழுங்குடன் திட்டமிட்ட முறையில் சிறப்பாக நடத்தியது பாராட்டுக்குரியது. நம்மை நோக்கி பல்வேறு பிரச்ச னைகளுக்காக தொழிலாளர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். ஏராள மான இயக்கங்கள், போராட்டங்கள் நடத்துகிறோம். ஆனால் தேர்தல் சமயத்தில் நமது சக்தி அதில் பிரதி பலிப்பதில்லை. நம்மை நோக்கி வரக்கூடியவர்களுக்கு இடதுசாரி அரசியலை கற்றுத் தர வேண்டும். வரக்கூடிய காலத்தில் இதைத் திட்டமிட்டுச் செய்ய வேண்டிய தேவை உள்ளது. தொழிலாளி, விவ சாயி, விவசாயத் தொழிலாளிகளை ஒன்றிணைத்து சவால்களைச் சந்திக்க வேண்டும். இதை இந்த மாநாடு எடுத்துக் காட்டியிருக்கிறது என்றனர்.
மேலும், நாடாளுமன்றத் தேர் தலில் ஏற்பட்ட தோல்வி, தொழில் நெருக்கடி, கல்வி ஆண்டு தொடங்கி குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை என மிகவும் கடினமான சூழலில் நாங்கள் இந்த மாநாட்டை நடத்து கிறோம் என ஊத்துக்குளி கமிட்டி முன்வந்து வெற்றிகரமாக நடத்திக் காட்டியிருக்கிறார்கள். தற்போது பல்வேறு பகுதிகளிலும் தொழி லாளர்களின் போராட்ட குணத் தைப் பார்க்க முடிகிறது. தொழி லாளர் உரிமைகளைப் பறிக்கக் கூடிய நடவடிக்கைகளை பாஜக அரசு மேற்கொண்டிருக்கும் நிலையில், தொழிலாளர்கள் நம்பிக்கையோடு போராடுவதற்கு களம் காணத் தயாராகி வரு கின்றனர். தயக்கத்தை உடைத்து நம்பிக்கையை விதைத்திருக்கிறது இம்மாநாடு, என்றனர். இம்மாநாடு முடிந்த பிறகு சில நாட்களில் சாலப்பாளையம் என்ற ஒரு கிராமப்பகுதியில் மட்டும் 60 புதிய தொழிலாளர்கள் சிஐடியு உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர் என்ற செய்தி புது நம்பிக்கையை விதைத்தது. நிறைவாக நன்றி கூறிய சிஐடியு மாவட்டச் செய லாளர் கே.ரங்கராஜ் இதைப் பொருத்தமாக சுட்டிக் காட்ட, உற் சாகத்துடன் புறப்பட்டனர் தோழர்கள்! - வே.தூயவன்