திருப்பூர், ஜூன் 24 – திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர் பகுதியில் சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் கிணறுகள், நீர்நிலைகள் மாசடைகின்றன. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சாயக்கழிவு நீரை வெளியேற்றும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து நீராதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி இப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரைப்புதூர் ஊராட்சி மக்கள் அடர்த்தி மிகுந்த, வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இதில் கரைப் புதூர் கிராமத்தில் மட்டும் இரண்டா யிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் கரைப்புதூர் சுற்று வட்டார பகுதிகளில் சாயப்பட்டறை நிறுவனங்கள், பிரிண்டிங் நிறுவனங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. சாயஆலைகள் மறுசுழற்சித் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சாயக்கழிவு நீரை முறையாக சுத்திகரித்து அதை மறுபடியும் சாயமேற்ற பயன்படுத்த வேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால் இங்குள்ள பல ஆலைகள் மறுசுழற்சித் தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல், சாயக்கழிவுநீரை அப்படியே தங்கள் நிலத்தில் உள்ள ஆழ்குழாய்கள், கிணறுகள் மற்றும் ஓடைகளில் வெளியேற்றுகின்றனர்.இதனால் நிலத்தடி நீராதாரம் மாச டைந்து, பொது உபயோகத்துக்குக் கூட பயன்படுத்த முடியாத அளவுக்கு தண்ணீர் மாறிப் போயுள்ளது. இதேபோல் பாய்லர் நிறுவனங் களிலிருந்து கருப்பு துகள்கள் வெளி யேற்றப்படுவதால் சுவாசக் கோளாறு, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்த் தாக்கு தல் இப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. எனவே கரைப் புதூர் பகுதி மக்களுக்கு இடையூறா கவும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத் துவதாகவும், நோய் பரப்பும் சாய ஆலை நிறுவனங்கள், பிரின்டிங் நிறு வனங்கள், பாய்லர்.ஆலைகளை உட னடியாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். இந்த ஆலைகளால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி பல ஆண்டுகளாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் அப்பகுதி மக்கள் முறையிட்டாலும் தவறிழைக் கும் சாய, சலவை ஆலைகளை முறைப் படுத்தவோ, சாயக்கழிவுநீரை வெளி யேற்றாமல் தடுக்கவோ உரிய நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. இந் நிலையில் மக்கள் அதிருப்தி அடைந்து தற்போது போராட்ட நடவ டிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரி யத்தை கண்டித்து இப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கரைப்புதூர் வாழைத்தோட்டம் பகுதி யில், காலவரையறை அற்ற காத் திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர்.