சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
நாமக்கல், நவ.10- நாமக்கல் மாவட்டம், எலச்சி பாளையம் அருகில் உள்ள தரை மட்ட பாலம் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. இப் பாலத்தை உடனடியாக சீரமைக்கு மாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம், நாமக்கல் மாவட்டங் களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருச் செங்கோடு வட்டம், எலச்சி பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட அகரம், இலுப்புலி ஆகிய பகுதி களில் திருமணிமுத்தாற்றின் குறுக்கே தரைமட்ட பாலம் உள்ளது. இப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. அகரம் ஊராட்சி கொத்தம்பாளையத்தில் கடுமையான வெள்ளப் பெருக்கால் பெரியமணலி,கவுண்டம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில்யில் பள்ளி மாண வர்கள், வெளியூர் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் இலுப்புலி, மடையங் காட்டுபுதூர்,மாரப்பம்பாளையம், கோக்கலை,எளையாம்பாளையம், மாவுரெட்டிபட்டி, புள்ளாச்சி பட்டி ஆகிய கிராங்களைச் சேர்ந்த மக்கள் 10கி.மீ., தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். இதேபோல் மடையன் காட்டு தரைமட்ட பாலம் கடந்தாண்டு வெள்ளப்பெருக்கின் போது சேதமடைந்தது. இந்த பாலங்களை சீரமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந் நிலையில் பாலத்தை சீரமைக்கும் பணி ஒரு வருடமாக நடைபெற்றது. இதில் 50 சதவிகிதம் பணி மட்டுமே நடந்துள்ளது. தற்போது வெள்ளப் பெருக்கல் இப்பாலம் எந்த நேரத் திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது என இப்பகுதி மக்கள் தெரி வித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த தரைமட்ட பாலத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.