உடுமலை, அமராவதி நகர் சைனிக் பள்ளியில் பசுமை தீபாவளி கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் முதல்வர் எச்.எஸ்.சிதானா, நிர்வாக அதிகாரி லெப்டினட் கர்னல் அமித்குர்குரே ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.