tamilnadu

img

"குடியுரிமையைப் பறிப்பது உயிரைப் பறிப்பதை விட கொடுமையானது"

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் கருத்துரை

திருப்பூர், பிப். 3 - குடியுரிமையைப் பறிப்பது உயிரைப் பறிப்பதை விடக் கொடுமை யானது என்று திருப்பூர் புத்தகத் திரு விழாவில் கவிஞர் மதுக்கூர் ராமலிங் கம் கூறினார். 17ஆவது திருப்பூர் புத்தகத் திரு விழாவில் நான்காம் நாளான ஞாயிற் றுக்கிழமை மாலை அரிமா மு.ஜீவானந் தம் தலைமையில் நடைபெற்ற கருத் தரங்கில் `நாமார்க்கும் குடியல்லோம்` எனும் தலைப்பில் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் உரையாற்றினார். அப் போது அவர் கூறியதாவது: நாமார்க் கும் குடியல்லோம் எனும் வாசகம் அப்பர் அடிகள் சொன்ன பதிகத்தில்  உள்ளதாகும். அவர் எந்த சூழ்நிலை யில் இதைச் சொன்னார் என்பதைக் கவனிக்க வேண்டும். அப்பர் திரு நாவுக்கரசரின் பெற்றோர் காலமான பிறகு அவரது தமக்கை திலகவதியும், அவரும் தனித்து வாழ்கின்றனர். திலகவதி சைவ மதத்தைப் பின்பற்றி னார். திருநாவுக்கரசர் சமண மதத் தைத் தழுவினார். அக்கா திலகவதி யின் வேண்டுதலில், திருநாவுக்கர சருக்கு கடுமையான சூழை நோய் ஏற்பட்டு தீராத வயிற்று வலியில் அவதிப்பட்டார். அவரது வலி தீர சைவ  மதத்திற்கு மாறும்படி திலகவதி வேண்டுகிறார். அதன்படி திருநாவுக்க ரசர் சமண மதத்தில் இருந்து சைவத் திற்கு மாறுகிறார். இதை கேள்விப் பட்ட அப்போதைய மன்னன் (சமண மதத்தைச் சேர்ந்தவர்) திருநாவுக்கரச ருக்குப் பலவித இன்னல்களை விளை விக்கிறார். மன்னரின் ஏவலர்கள், திரு நாவுக்கரசரை மன்னர் அழைக்கிறார் எனச் சொல்லி கூப்பிட்டுப் போக வரு கின்றனர், அப்போதுதான், அவர் “நாமார்க்கும் குடியல்லோம்!” என மன் னனுக்கு எதிராக உரத்து முழங்கு கிறார். 

நாயன்மார்களில் மட்டுமல்ல, வைணவ ஆழ்வார்களிலும் திருமழிசை ஆழ்வாரின் சீடரை மன்னன் நாடு கடத்த உத்தரவிடும்போது, சீடரு டன், திருமழிசை ஆழ்வாரும் புறப் படுகிறார். அவருடன் சேர்ந்து திரு மாலும், லட்சுமியும் காஞ்சிபுரத்தை விட்டு புறப்பட்டதாகச் செய்தி பரவு கிறது. செல்வம் போனால் மன்ன னுக்கு ஏது அதிகாரம்? எனவே கட வுளை வரவழைக்க மன்னன், நாட்டை விட்டு வெளியேறிய திருமழிசை ஆழ்வாரை அவரது சீடருடன் திரும்பி வரும்படி அழைக்கிறார். பக்தி காலத்தில் மட்டுமின்றி இப் போதும் கூட, கிராமங்களில் ஏதேனும் காரணங்களுக்காக சில குடும்பங் களை ஊரை விட்டு விலக்கி வைப்ப தாகச் சொல்வதும் குடியுரிமைப் பறிப் புத்தான். ஊரில் உப்பு உள்பட எப் பொருளையும் வாங்க முடியாது, யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டார்கள். விலக்கி வைக்கப்பட்ட குடும்பம் படும் அவதி சொல்ல முடியா தது. இந்த குடியுரிமைப் பறிப்பு என் பது உயிரைப் பறிப்பதை விட கொடுமையானது. உலகம் வியந்த திரைக்கலைஞர் இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லி சாப் ளின் அமெரிக்காவில் பல ஆண்டு காலம் வாழ்ந்தவர். மாடர்ன் டைம்ஸ் என்ற பெயரில் தொழிற்சாலைகள் மனிதர்களின் வாழ்வை எந்திரகதியாக மாற்றுவதைப் பற்றி அழகாக பட மெடுத்தார். அந்த படத்தை எடுத்த கார ணத்திற்காக, சாப்ளின் லண்டன் சென்றுவிட்டு அமெரிக்காவுக்கு திரும்ப முற்பட்டபோது, அனுமதி மறுத்துவிட்டது அமெரிக்க அரசு, இதுவும் குடியுரிமைப் பறிப்புத்தான். 

மனிதகுல விடுதலைக்காக வாழ் நாளை அர்ப்பணித்த கார்ல் மார்க்ஸ் அப்போதைய ஜெர்மன் தேசத்திற்கு பக்கத்தில் பிரஷ்யாவைச் சேர்ந்தவர். அவர் எழுத்துகள் புரட்சிகரமாக இருந்ததால் பிரஷ்யா, பெல்ஜியம், பிரான்ஸ் என ஒவ்வொரு நாடும் வெளியேற்றின. எந்த நாட்டிலும் அவர் குடியுரிமை பெற்று வாழ முடிய வில்லை. பிற்காலத்தில் லண்டனில் வாழ்ந்த கார்ல் மார்க்ஸ் மறைந்த போது, அவரது சடலத்தை அநாதை களை அடக்கம் செய்யும் ஹைகேட் இடுகாட்டில்தான் அடக்கம் செய்த னர். மார்க்ஸ் தன்னை “நாடற்றவன்” என அழைத்துக் கொண்டார்.  பக்தி இலக்கியமானாலும், நவீன காலமானாலும், கிராமப்புறமானா லும் காலங்காலமாக குடியுரிமைப் பறிப்பு என்பது மக்களின் வாழ்க் கையை பறிக்கக்கூடியதாக, அச்சு றுத்தக் கூடியதாக இருக்கிறது. இவ் வாறு மதுக்கூர் ராமலிங்கம் கூறினார். முன்னதாக “குறளமுது” என்ற தலைப்பில் சென்னை பெருநகர காவல் துறை துணை ஆணையர் இரா.திரு நாவுக்கரசு பேசுகையில், “மனிதர்கள் தனக்காகவோ, தனது குடும்பத்திற்கா கவோ, தனது சொந்த உறவுகளுக்கா கவோ வாழ்வதைக் காட்டிலும், சமுதா யத்திற்காக வாழ்வதே சிறந்த வாழ்வு என்று குறள் வழியே எடுத்துக் காட்டி னார். தனது பேச்சின் நிறைவாக, தோழமை அமைப்பின் நிர்வாகிகள் கே.ரங்கராஜ், சுகுமார், பரணி ஆகி யோரை மேடைக்கு அழைத்து தானும் தனது துணைவியும் எழுதிய புத்தகங் களை தோழமை நூலகத்திற்குப் பரி சளித்தார்.

வனத்துக்குள் திருப்பூர் அமைப் பின் தலைவர் கிளாசிக்போலோ டி.ஆர்.சிவராமன் வாழ்த்திப் பேசி னார். போதி தர்மர் சிலம்பப் பள்ளி  மாணவர்களின் சிலம்பாட்டம் நடை பெற்றது. நிகழ்வு தொடங்கும்போது பானுமதி சிகாமணி வரவேற்றார். யுனிவர்சல் கே.பழனிசாமி, எம்.கே.எம்.பாலசுப்பிரமணியம், டாக்டர் விஷ்ணு பொன்சிங், எஸ்.பி.டெக்ஸ் பொன்னுசாமி, டைம்ஸ் டையிங் சி.விஜயகுமார், சக்ரவர்த்தி பிளாஸ் டிக் இன்டஸ்ட்ரீஸ் பி.அருள்செல்வன், கிராப்ட் கிரியேஷன் பி.எஸ்.குருரா ஜன் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.  இந்நிகழ்வில் பெண்கள், இளை ஞர்கள் உள்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவாக வர வேற்புக்குழு சார்பில் செ.மணிகண் டன் நன்றி கூறினார்.