பொள்ளாச்சி, நவ.16- பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் பூங்கா முன்பு நடந்து சென்றவர்கள் மீது கார் மோதியதில், 8 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆழி யார் பூங்கா சுற்றுலா தளமாக இருந்து வருகிறது. கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட இப்பூங்கா தற்போது சில தளர்வுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவியத் தொடங்கியுள்ள னர். இந்நிலையில், திங்களன்று மதியம் பூங்கா அருகே வேக மாக வந்த கார் ஒன்று, சாலையில் நடந்து சென்று கொண்டி ருந்தவர்கள் மீது மோதியது. இதில் வர்ஷா(8) என்ற சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், திருப்பூர் இடுவாயைச் சேர்ந்த இலக்கியா, துர்கா, புவனேஸ்வரன், சபரீஷ், பிரியா, யுவராஜ் ஆகி யோர் படுகாயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விபத்திற்கு காரணமான காரை பறிGirl செய்து, ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.