tamilnadu

img

நூறு ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் வண்டிப் பாதையை அகற்றுவதா!

விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

உடுமலை, நவ. 25-  நூறு ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் வண்டிப் பாதையை அகற்று வதை கண்டித்து உடுமலை பெரிய வாளவாடி ஊராட்சி அலுவலகம் முன்பு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உடுமலை தாலுகா பெரிய வாள வாடி கிராமத்தில் 100 ஆண்டுகளாக விவசாயிகள் பயன்படுத்தி வரும் வண் டிப்பாதையை அகற்ற முயற்சி செய் வதை கைவிட வேண்டும். அதிகாலை யில் மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கப் பட்ட அரசு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும். வாளவாடி - சர்க்கார் புதூர் இணைப்பு சாலையை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி திங்களன்று உடு மலை பெரியவாளவாடி ஊராட்சி அலு வலகம் முன்பு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு லோகநா தன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், ஒன் றிய தலைவர் ராஜகோபால், தாலுகா செயலாளர் பாலதண்டபாணி ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.