tamilnadu

டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

அன்னூர், ஜன. 25- அன்னூர் அருகே பொன்னே கவுண்டன் புதூரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அப் புறப்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. அன்னூர் ஒன்றியம், மாசகவுண் டன் செட்டிபாளையத்தில் ஊராட் சியில் உள்ள பொன்னே கவுண் டன் புதூரில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இப்பகுதி யில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருவதால் அப்பகுதியினர் பெரும் இன்னல்களுக்கு உள்ளாக்கி வரு கின்றனர். மேலும், கடந்த சில  மாதங்களுக்குள் மட்டும் அப்பகுதி யில்  மதுபோதையின் காரணமாக ஏழு பேர்  விபத்தில் உயிரிழந்துள் ளனர். ஆகவே, இக்கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினரும் மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் தற் போது வரை டாஸ்மாக் கடை  அகற்றுவதற்கு எந்த முயற்சியும்  மாவட்ட நிர்வாகம் எடுக்க வில்லை. ஆனால் போராடிய மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய் துள்ளது.  இந்நிலையில் குடியரசு தினத் தில் அப்பகுதியில் நடைபெற உள்ள கிராமசபை கூட்டத்தில் டாஸ்மாக் கடையை மூட தீர்மா னம் நிறைவேற்ற அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ள நிலையில், அரசு நிர்வாகம் அதனை உடனடி யாக செயல்படுத்த வேண்டுமென அப்பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி மகேந் திரன் வலியுறுத்தியுள்ளார்.

;