திருப்பூர், மே 11-திருப்பூரில் குழந்தைகளுக்கு பனை ஓலையில் இருந்து கைவினைப் பொருள்கள் தயாரிப்பதற்கான இலவச பயிற்சி முகாம் இன்று (மே12) நடைபெறுகிறது. திருப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையம், அரிமா சங்கம் மற்றும் சுப்ரீம் பேரடைஸ் ஆகியவை சார்பில் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள அரிமா அரங்கில் ஞாயிறன்று (மே 12) காலை 9.50 மணி முதல் 12.30 மணி வரை பனை ஓலைகளில் இருந்து கைவினைப் பொருள்கள் தயாரிப்பதற்கான செய்முறை பயிற்சியும், இசை, பாடல்கள் வாயிலாக குழந்தைகளுக்கு கதைச் சொல்லி தனித்திறன் அறிதல் மற்றும் ஊக்குவித்தல் பயிற்சியும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.