tamilnadu

காவல் துறையினர் உதவியுடன் மோசடி செய்யும் நபர்கள்

நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்பூர், ஆக. 17 – திருப்பூரில் இரண்டாம் தர துணி வியாபாரிகளிடம் மோசடி செய்யும் நபர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தினர்.  திருப்பூர் மாநகரில் நெசவாளர் காலனி, எஸ்.வி. காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  ஏற்றுமதியாளர் கள் மற்றும் நேரடி உற்பத்தியாளர்களிடம் எஞ்சும் இரண் டாம் தர துணிகளை வாங்கிவந்து  பின்னலாடை நிறுவ னங்களுக்கு விற்பனை செய்யும் வர்த்தகம் பெருமளவு நடை பெற்று வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடை வைத்து நடத்தி வருகின்றனர். உபரி துணி என்ப தால் இவற்றுக்கு முறையாக பில் போடாமல் வாங்கி வியா பாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில  நாட்களாக சில நபர்கள் இங்குள்ள குடோன்களுக்கு வந்து துணி எங்களுடையது என காவல் துறையினரிடம் பொய்யான புகார் அளித்து ஆயிரக்கணக்கான கிலோ துணிகளைப் பறித்துச் செல்கின்றனர். இதற்குப் காவலர்களும் உடந்தையாக இருக்கின்றனர். இதைப் பற்றி இரண்டாம் தர துணி வியாபாரிகள் புகார் அளித்தாலும் காவல் துறை எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என அவர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர். இது குறித்து திருப்பூர் மாநகர காவல் துறை  ஆணையரை நேரில் சந்தித்து புகார் அளிக்க இருப்பதா கவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.